பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் 10. எருமைப்பத்து. இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தினும், எருமை யாகிய கருப்பொருளே சிறந்தெடுத்து மொழியப்படுதலின், இஃது இப் பெயரினைப் பெறுவதாயிற்று. எருமையினம் உலகெங்கும் பரவி யிருக்கின்ற தெனி லும், நாடுதோறும், அவ்வங் கிலத்துத் தட்பவெப்ப கிலேகட் கேற்ப, அவற்றின் உடலமைப்பும் கோடுகளின் வளர்ச்சியும் அமைந்திருக்கின்றன. நாம் வாழும் உலகில் சிறக்திவிளங் கும் நகரங்கள்யாவும், பண்டைக்காலத்தில் இவ் வெருமை யினங்களின் உழைப்புச்சிறப்பால் வளம்பெற்றன என்பர். பிற துனேக் கருவிகளே ஆக்கிக்கொள்ளும் அறிவுவன்மை மக்கட்குத் தோன்றுதற்குமுன், ஊர்திகளாகவும், உழவுத் அணயாகவும் உதவிய பழம்பெருமை எருமையதே. ஐரோப்பாவில் இப்போழ்து வாழும் எருமையினம் பலவும், பல நூற்ருண்டுகட்கு முன்பே ஆசியாட்டிலிருந்து சென் ற வ ற் றின் வழித்தோன்றல்களே யாகும் என்பர். மேடுைகளில் எருமையினமும், குதிரையினமும் தோன்றி மக்கட்கு வேண்டிய உதவியினைப் புரியத் தொடங்குதற்கு முன், ஆனேறும் ஆனிரையுமே ஆற்றிவந்தன. பின்னா, எருமையினம் போந்து அவற்றின் கிலேயில் கின்று உழுதல், வண்டியிழுத்தல், சுமைகொண்டுசேறல் முதலிய செயல்களைச் செவ்வே செய்துபோங்தன என்பர். உயிர் நூல் அறிஞர், இவ்வெருமையினம் பலவும் பண் டையில் நம் காட்டிற்ருன் தோன்றின என்று கூறுப. அம ரிக்கநாட்டினர் கூறும் எருமையினம் (Bison), உண்மை எருமை யினமாகா. ஏனே மேனுட்டெருமைகள் கம்காட்டவற் றின் வழித்தோன்றல் என்பது முன்னரே கூறப்பட்டது. அவையும் உழவுமுதலியவற்றைச் செய்தல்போல, பால்,