பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 205 பொன்றினைச் சிறப்பிக்கப் பே த இளங்கோவடிகள், அது, "விண்பொரு பெரும் புகழ்க் கரிகால்வளவன், கண் பதங் கொள்ளும் தலைநாட்போல' (சிலப் 6:159-160) இருந்ததெனக் குறிக்கின்ருர், இக் கடலாட்டு, மேடுைகளிலும் பெரிதும் சிறப்பாகப் போற்றப்படுகின்றது. இக்காலத்திலும், கடற்கரை நகரங் களிலுள்ளவர்கள் இதனை விரும்புகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சி செய்த அறிஞர் சில அரிய குறிப்புக்களைக் தந்திருக்கின்றனர். "கடலாடுவது உடல்நலக் குன்றிய இளைஞர்க்குப் பெரிதும் நன்மைதருவதாகும். ஆனுல், அவர்கள், காலேயில் உணவுகொண்டபின், இரண்டுமணிநேரம் கழித்துக் கடலா டல் வேண்டும்; அதுவும் குறைந்தது இரண்டு, அல்லது மூன்றுமணிநேரம் நீரில் நீந்தி விளையாட வேண்டும். உண வுண்ட இரண்டுமணி நேரத்திற்குள் எவரும் கடலாடக் கூடாது. மிக்க உழைப்பால் உடல் ஒய்ந்து இருப்பவர்க்குக் கடலாட்டுத் தீங்கு விளைவிக்கும். ரோடுவோர் தமது உடல் கு ட க இருக்கும்போதுதான் அது செய்யத் தொடங்க வேண்டும். கடலில் ரோட இறங்குங்கால், சிறி தும் தயக்க மின்றி, விரையச் சென்று இறங்கி மூழ்குவதும், கரையேறியவழி, சிறிதும் தாழாது உடலைத் துடைத்துக் கொள்வதும் கடலாடுவோர் குறிக்கொள்ள வேண்டியன வாகும். இன்றேல், இவை உடல்நலத்துக்குப் பெருந்திங் கினை உண்டுபண்ணும் எ ன் அ துணிந்திருக்கின்றனர். உடலில் தோய்ந்த நீர் தானே புலருமாறு விடுவதும், நீரின் கண் கெடிது தங்கி ஆடுவதும் ஆகா. ரோடுங்கால், ஆடு வோர் உடலில் குளிருணர்ச்சி தட்டுமாயின், உடனே கரையேறிவிடுவது தக்கது. 'கடலாடுவதே பெருந்தொழிலாக உடையவர் பலர் உளர். அவர்களுட் பலர் காதுசோயால் மெலிந்து உயிரை