பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அதியன் இன்றில்லை!


பேராசிரியர் கவியரசர் மீ. இராசேந்திரன் (மீரா)

பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே
பரணர்தான் பரணர்தான் தாங்கள்! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே
நக்கீரர்தான் தாங்கள் இந்த நாளில்
கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்
காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்
தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே
தாங்கள் அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!

அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால்
அடடாவோ ஈதென்ன விந்தை இங்கே
புதியதொரு ஆண்ஒளவை எனவி யப்பான்
பூரிப்பான் மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
அளித்துங்கள் மேனியி னைக்காத லிக்கும்
முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி
மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!