பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

செம்மொழிப் புதையல்


விளைவதாகும்; குடிகளின் மன வியல்பை நீ நன்கறிதல் வேண்டும் அவர்கள்,

மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்

வேந்தரையே பழிப்பர்.

அதுநன் கறிந்தனை யாயின் நீயும்,
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறந் தருகுவை யாயின்,
அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே

என்று அறிவுறுத்தினார். வளவன் அறிவு தெளிந்து செய்வன செய்தான். பிறகு நாடு நாடாயிற்று.

பாண்டி நாட்டை யாண்ட வேந்தருள் அறிவுடை நம்பியென்பவன் ஒருவன். இவன் பெயரளவில் அறிவுடைய நம்பியே தவிரச், செயலில் அறிவுடைந்த நம்பி யாவன். இவன் ஆட்சிக் காலத்தே, இவன் இன்பத் துறையில் மிக எளியனாய் ஒழுகினான். இவனைச் சூழ்ந்திருந்த அரசியற் குழுவினர் நீர்வழிக் கோரை போல இவன் எண்ணப்படியே ஒழுகினார்கள். நாடு வேந்தனுக்கேயுரியது; அதனால் அதன்கண் விளைவன அவனுக்கே உரியவை; அவற்றை அவன் விரும்புகிறபடியே செய்ய உரிமையுண்டென்று சொல்லிக் குடிகளைக் பலவகையிலும் அலைக்கத் தொடங்கினர். அதனால் நாட்டில் மக்களுக்கு மிக்க வருத்தமுண்டாயிற்று. அதனை யறிந்த பிசிராந்தையார் என்னும் சான்றோர், வேந்தனை யணுகி, “வேந்தே, நின் பட்டத்து யானைக் கெனத் தனியே நிலம் விடப்பட்டிருக்கிறது. அதன்கண் விளையும் நெல் அதற்குரியதே. அதனை விளைத்து நெல் லாக்கிக் குற்றி யரிசி யாக்கி, கவளம் கவளமாகத் தரின், அந்நெல்லுணவு அதற்குப் பன்னாளைக்கு உணவாகும். அந்நிலம் யானைக்குரியதே; அதனால் அவ் யானையை அந் நிலத்தே விட்டு மேய விடுக என்று சொல்லிவிட்டால் என்னாகும்? நூறு வேலி நிலமாயினும், அதன் வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும். அதுபோல, நீயே சென்று நில வருவாய் கொள்ளத் தொடங்கின் நாடு பாழ்படும்; அது செய்யற்க’ என்ற கருத்தமைய,