பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

செம்மொழிப் புதையல்


தோழி :-அதனால் தானே நாம் அதை “வெவ்வாய்த் தட்டை”என்றோம்.

மெல்லி :-அதனாலா, அன்றன்று; அதனைச் சுழற்றிய மாத்திரையே, தினைப் புனத்தில் படிந்த பறவைகள் அனைத்தும் பறந்து ஓடிவிட்ட தோடு, தினைமணிகள் பலவும் சிதறிவிட்டன.

தோழி :-எதனாலோ ஒன்று. அப்போது நாம் அந்த வேங்கை மரத்தின் கவட்டில் கட்டின பரண் மீது இருந்தபோது என்ன நடந்தது?

மெல்லி :- வண்டினம் வந்து பொன்னிறம் கொண்ட பூவில் தேன் உண்டு இன்பமாக முரன்றது. நாம் அதன் இன்பவோசையைக் கேட்டு அதன் மீது கருத்தைச் செலுத்தி நின்றோம்.

தோழி :-அப்போது நாம் திடுக்கிட்டுச் சட்டெனப் பின்புறம் . திரும்பினோமே, ஏன்?

மெல்லி :-(நாணித் தலை கவிழ்கின்றாள்)

தோழி :-"மையிரோதி,மடநல்லீரே"என்றொரு காளை நம்மை அழைத்தானன்றோ? அவன் ஏன் நம்மை "மையிரோதி மடநல்லிரே" என்றான். அதனை யறிவாயோ?

மெல்லி :-நம் பின்நின்ற அவர் கண்ணிற் பட்டது நம் கூந்தல். அதனால் அவ்வாறு அழைத்தார்? இது தானே காரணம்?

தோழி :- இதனை துணுக்கமாக அறிந்து கொள்ளும் உனக்கு இன்னும் நான் என்ன சொல்வது?

மெல்லி :- இல்லை யில்லை. இது தான் காரணமாக இருக்கலாம் என்பது என் கருத்து. அது கிடக்கட்டும் நீ சொல்.

தோழி :-அப்போது அவன் நம்மை என்ன கேட்டான்?

மெல்லி :-கெடுதி வினவினார்.