பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

பஞ்ச தந்திரக் கதைகள்


ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு இரவு வேளையில் ஒரு கள்ளன் வந்தான். கத்தியும் கையுமாக பயங்கரமான தோற்றத்தோடு அங்கு வந்த அத்தக் கள்ளனைக் கண்டவுடன் அந்தப் பெண் பயந்து போய்ததன் கணவனான கிழவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

அவள் தன்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டவுடன் கிழவனுக்கு ஆனந்தம் உண்டாகி விட்டது. அவன் திருட வந்த கள்ளனைப் பார்த்து, அப்பா, நல்ல காரியம் செய்தாய்! இது வரை என் அருகில் வரக்கூடப் பிரியமில்லாமல் இருந்த என் மனைவி என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ளும்படி நீ செய்து விட்டாய். உன் உதவியை நான் என்றும் மறக்க முடியாது.