பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I'80 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது பு. ரை:-பொய்கையாகிய இடத்தில் வாழும் புலால் காறும் நீர் காய் வாளைமீனை நாளிாையாகப் பெறும் ஊர, பெரும, கூடி முயங்காதவழி, எமது நலம் முற்றும் கழிந்து படுவதாயினும், பிறரைக் கூடி முயங்கிய கின் மார்பினை யாம் கூடுவேமல்லேம் எ. அறு. பொய்கைப்பள்ளி, இருபெயரொட்டு ; கல்லளைப் பள்ளி' (நற். 98) எனப் பிறவிடங்கட்கும் பள்ளியென்பது உரிமை யெய்துமாறு காண்க. நாளிாை, காலைவேளையிற் பெறும் உணவு. " நாள் ஞாயிறு ' (கள. 2) என நாட் பெயர் காலைப்போது குறித்தல் அறிக. உம்மையால், ! கூடாதவழி நலங்கெடுதல் ஒருதலை யென்பது உணரகின்றது. *அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய், வாளை நாளிசை பெறாஉம் ஊரன், (குறுங். 364) என்றும், 'பொய்கை நீர்நாய்ப் புலவுகா றிரும்போத்து, வாளை காளிரை தேரும் ஊா' (அகம். 386) என்றும் சான்ருேர் கூறுப. தன்னலம், அன்மை சுட்டிய எதிர்மறைப் பன்மைத் தன்மைவினை. முற்று. *.. . . . . நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழும் உயிரினங் களைப் பிடித்துண்டு வாழும் உயிர்வகையுள் ஒன்று. இது காடி இனத்தைச் சேர்ந்தது என்றும் கூறுப. இஃது ஏனைய. நாய்கள் செழித்து வாழும் கிலங்களிற் செம்மையாக வாழும் சிறப்புடையது. % நீத்துவதிலும், நீர்க்கு அடியில் இருகரை களுக்கும் இடையே வழிவளை (Tunnel) செய்தலிலும் கை தேர்ந்தது. இதன் பற்கள் வாள்வாய் பேர்ல் அமைந்து, அகப்பட்ட பொருள் நெகிழ்ந்தோடா வகையில் இறுகப் பற்றும் பான்மையமைந்தவை. அதனல். மிக்க வழவழப் - * Their brilliant swimming and tunnelling, their fine teeth which grip fishes that elude fingers, their extensive travels when food or water fail, make otters very efficient in the struggle for life—Ibid.