இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8 மன ஊஞ்சல் முருகேச வாத்தியாரின் மகனைப் பற்றி ஏதோ சொல்ல வந்தவர் சொல்லமாட்டாமல் தவிக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட தங்கம். அப்பா அழாதீர்கள்! நீங்கள் இதைப் பற்றி ஒன்றும் பேசவேண்டாம்!” என்று சொல்லிச் சமாதானப் படுத்த முயன்றாள். ஆனால், அவள் முயற்சி பலிக்கவில்லை. கந்தசாமி வாத்தியார் அழுது கொண்டிருந்தபடியே தூங்கிப்போய் விட்டார். - அவர் என்ன எண்ணினார் என்பது புரியாமல் தங்கம் அன்று இரவு முழுவதும் குழம்பிக் கொண்டிருந்தாள்.