பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

丑94 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது யற்றுத் தாம்விழ்வார், மதிமருள நீத்தக் கடை' (கவி. 147) என்பதன் உரையால், வண்டு தாதுண்ட மலர் வாடுதல் உண்மை யறியப்படும்: இஃது, 'அவனறி வாற்ற வறியுமாகலின்' (பொ. 147) என்ற சூத்திரத்துக் காமக் கிழத்தியர் நலம்பா ராட்டிய, தீமையின் முடிக்கும் பொருளின் கண்னும்” என்னும் பகுதியிற் கூ அ ம் , காமக்கிழத்தியர் நலம் பாராட்டிய பொருளின்கண் த லை வி கூறியது. காமக்கிழத்தியர் கம் நலத்தைப் பாராட்டுமிடத்துத் தலைவியொடு மாறுபட்டுத் தருக்கி யொழுகுவ சாகலின், அஃதறியும் தலைவி பொருது அவரை இகழ்ந்து மொழிதற்கும் உரியள். 'பெருாலம் தருக்கு மென்ப' என்றது காமக்கிழத்தியாகிய பரத்தை தன் கலம் பாராட்டியதாகும். 'வண்டு தாதுண்ட மல ரிலும் பலர் துதல் பசக்கப்பட்டோர்' என்றது, இவளும் அவர்போல துதல்பசந்து நலங்கெடுதல் ஒருதலை என்பது எய்தத் தீமையின் முடித்தவாறு. இனி இச் சூத்திரப் பகுதிக்கு, காமக்கிழத்தியர் நலம்பாராட்டிய பொருளின் கண்லும், தீமையின் முடிக்கும் பொருளின் கண்னும், தலைவி காமக்கிழத்தியர்கலம்பாராட்டித் தீமையின் முடிக்கும் பொருளின் கண்லும் தலைவிக்குக் கூற்று நிகழும் எனவரும் எண்பொருளை நோக்காது, ஆசிரியர், கச்சினர்க்கினியர், 'நலம்பாராட்டிய காமக்கிழத்தியர், தலைவி தன்னிற் சிறத்தா சாக, தன்ன்ை நலம் பாராட்டப்பட்ட இற்பரத்தையர் மேல் தீமையுறுவர் என முடித்துக் கூறும் பொருளின் கண்” உரைப்பர். மேலும், அவர், இப் பகுதிக்கு இப் பாட்டினேயே காட்டி, 'இப்பொழுது கிடையாதது கிடைத்த தாக வரைந்து கொண்ட பரத்தை, தன்னெடு இளமைச் செவ்வி யொவ்வா என்னேயும் தன்ளுேடு ஒப்பித்துத் தன் பெரிய நிலத்தாலே மாறுபடும் என்ப என அவள் நலத் தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வ ண் டு காதண்ட மலரிலும் பலர் எனத் தீமையின் முடித்தவாறும்