பக்கம்:பாரதித் தமிழ்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லேயப்பருக்குக் கடிதம்

19 g 9డి 1915

ஒம்.

புதுச்சேரி,

19th July 1915.

எனதருமைத் தம்பியாகிய பூரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக.

தம்பி-மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள், நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன் நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்-. ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே தாக்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமென்றே கருதுகிறேன்.

鬱 臺 影

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறி விலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவ தற்கு வழியாகும். வேறு வழியில்லை.

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வட நாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷைப் பத்திரிகைககள் என்ன அற்புதமான புதுமை பெற் றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்துகொள்ள முடியுமானல்-தமிழ் நாட்டிற்கு எத்தனை நன்மை யுண்டாகும்; தமிழ், தமிழ், தமிழ்-என்று எப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/140&oldid=605404" இலிருந்து மீள்விக்கப்பட்டது