பக்கம்:பாரதித் தமிழ்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாஸ்யம் 439

தொடங்கியிருப்பது மிகவும் விநோதமாகத் தோன்று வதால், இங்கு அதைக் குறித்து எழுத நேர்ந்தது. முதலாவது இவ்வழக்கம் தேச பக்தன்’ பத்திரி கையில் தொடக்க மெய்திற்றென்று நினைக்கிருேம். அப் பத்திரிகையின் பழைய பத்திராதிபராகிய பூரீமான் கலியான ஸாந்தர முதலியாருடைய காலந் தொட்டே அதில், ‘சுதேச மித்திரன் சொல்லு கிருன்’, ‘தேச பக்தன் சொல்லுகிருன்’ என்பன போன்ற பிரயோகங்கள் வழங்கி வருகின்றன. இப் போது பூரீமான் முதலியார் நடத்திவரும் ‘நவ சக்தி'ப் பத்திரிகையிலும் அவ்வழக்க மிருந்து வருகிறது. எனவே, சில தினங்களுக்கு முன் ஏதோ தொழிலாளர் விஷயமாக மேற்கூறிய இரண்டு பத்திரிகைகளுக்குள்ளே எழுந்திருக்கும் விவாத்ம் மிகவும் ரஸமாக இருக்கிறது. “தேச பக்த'னே ஆண் பாலாக்கி ரீ முதலியார் எழுதி வருகிரு.ர். “தேச பக்தன்” புதிய பத்திராதிபரோ, நவ சக்தி'யைப் .ெ ப ன் பாலாக்கிவிட்டார்! திருஷ்டாந்தமாக மேற்படி ஆண்பால் பத்திரிகையிலுள்ள பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள். தேச பக்தன் தன் பிரதி நிதியை ஏன் அனுப்பவில்லை யென்று நவசக்தி கேட் கிருள்’, ‘அவர் சொல்லி யனுப்பியதையும் நவ சக்தி மறந்துவிட்டாள் போலும்.’ இந்தப் புதிய வழி ரஸ்மாகத்தான் இருக்கிறது. ஆனல் இதைப் பொது வழக்கமாக்க முயன்றால், பலவித ஸங்கடங்கள் ஏற் படுமென்று தோன்றுகிறது. முக்யமாக, அன்ய பாவுைப் பத்திரிகைகளைக் குறித்துப் பேசுமிடத்தே தான் அதிகக் கஷ்டம்; லண்டன் டைம்ஸ்’, “ஈவினிங் ந்யூஸ்” என்பன பலவின்பாற் பெயர்க ளாதலால் டைம்ஸ் சொல்லுகின்றன, ஈவினிங் ந்யூஸ் பரிஹாஸம் பண்ணுகின்றன என்றெழுத நேரும்! மேலும் பெர்லினர் தகப்ளாத்”, “ப்ராங்க் புர்த்தெர் ஜெய்துங்’ என்பவை போன்ற ஜெர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/438&oldid=605871" இலிருந்து மீள்விக்கப்பட்டது