பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

31

இல்லை அவர்கள் பகையானால் அதனால் விளையும் கேடுபாடுகள் என்ன சாமான்யமானதாகவா இருக்கும்?

முதுமை பெற்றவர்கள் எல்லாரும் ஒன்று கூடி, பைசா நகர் பல்கலைக்கழகக் கணிதப் பேராசிரியர் என்ற பதவியிலே இருந்து கலீலியோவை நீக்கம் செய்து விட்டார்கள். அதனால் பல்கலை அறிஞரான அவர், பலவிதமான தொல்லைகள் ஏற்று அனுபவிக்கும் காலம் வந்தது.

அதற்குப் பிறகு கலீலியோ தனது அரிய முயற்சிகளால் தொல்லைகளால் பாதுவா Padua University பல்கலைக் கழகத்திலே கலீலியோ உயர் பதவி பெற்றார்! அங்கே அவர் பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். சிறந்த சேவையாளர் என்ற பெயரையும், புகழையும் பெற்றார். தமது ஐம்பத்தைந்தாம் வயதுவரை அவர் தளராமல், தளர்வில்லாமல், சோராமல் சோர்வில்லாமல், களைக்காமல்-சளைக்காமல், மக்கட் தொண்டே தனது தொண்டென, அறிவுத் தொண்டாற்றிச் சேவை புரித்தார்.

8. டெலஸ் கோப்பை முதன் முதல் கண்டு பிடித்தவர்

மூக்குக் கண்ணாடி வியாபாரியான தனது பழைய நண்பர் லிப்கரிஷே என்பவரைக், கலீலியோ வெனிஸ் நகர் சென்று பார்த்தார்! அந்த விஞ்ஞானி அப்போதுதான் தொலை நோக்கிக் கண்ணாடியைக் கண்டு பிடித்திருந்தார்!

இந்தக் கண்ணாடியைப் பற்றிக் கேள்விப்பட்ட கலீலியோ தனது நண்பரின் ஆய்வைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார் தன்னுடைய மனதை அந்த தொலைநோக்கி மீதே ஊடுருவ விட்டார்.

சாதாரண கண்களைக் கொண்டு, வான் பொருட்களையும் அதன் வியத்தகு விந்தைகளையும் தெரிந்துக்