பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோகமயமான ஒரு பேரின்பத்தில் நம் உள்ளம் ஆழ்ந்து, எல்லையற்ற காட்சிகளில் திளைக்கும்". இத்தகைய அனுபவத்தில் திளைத்து மிகவும் நூதனமாக உணர்ச்சி வெளிப்பாடுகளுடன் கூடிய அரிய கவிதைகளைப் படைத்த கவிஞர் போதலேர் மட்டும் அல்லர்; வேறு பலரும் இருந்திருக்கின்றனர். மகாகவி பாரதியாருக்கும் கஞ்சாப் பழக்கம் உண்டு; குயில் பாட்டும் இந்த அடிப்படையில, அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கனவுநிலைக் கற்பனைதான். கோலரிட்ஜின் குப்ளாய்கானையும்' இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். 女 „Louń giriigi GungGavii (Baudelaire Pierre Charles) 1821-ggiò ஆண்டில் ஒய்வு பெற்ற சட்டமன்ற உறுப்பினரின் மகனாகப் பாரிசில் பிறந்தார். இவர் சிறுவனாக இருக்கும் போதே தந்தை இறந்தார்; தாய் ஒர் இராணுவ அதிகாரியை மறுமணம் செய்து கொண்டார். போதலேர் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு சட்டக் கல்லூரியில் நுழைந்தார். வீட்டுக்கடங்காத பிள்ளையாக இருந்த இவரை கப்பவேற்றிக் கல்கத்தாவுக்கு அனுப்பினர் பெற்றோர். ஆனால் நடுவழியில் மொரீஷியஸ் தீவில் இறங்கிக் கொண்டார். வெப்ப மண்டலத்தில் இருந்த மொரீஷியஸ் தீவில் சிலகாலம் தங்கியிருந்து வெது வெதுப்பான அனுபவங்களோடு பாரீஸ் திரும்பினார் போதலேர். சுதந்தரமான பணவசதியோடு இருந்த போதலேர், பாரீசின் நவநாகரிகக் கேந்திரமான லத்தீன் குவார்ட்டர்ஸ் என்ற பகுதியில், கட்டுப்பாடற்ற உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார். நீக்ரோக் கலப்பு இனக்காரிகை, கருப்புரதி ழான் துய்வால் (Black Wenus leanne Duvel) என்பவள் இவருக்கு நிரந்தரக் காதலியாகக் கிடைத்தாள்.சீமாட்டி சாபாத்தியர் என்ற நடிகையிடமும் அவருக்குத் தொடர்பிருந்தது. போதலேரின் சொர்க்க நரகக் கற்பனைகள், இவ்விருவர் மீதும் அவர் கொண்ட காதற் சுழியிலேயே சுழன்றடிக் கின்றன. - * . * இளமையில் அவர் விரும்பி ஏற்றுக் கொண்ட கொள்கை 'டாண்டியிசம்". தன் விருப்பப்படி வாழ்தல், தன் முனைப்போடு 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/98&oldid=464004" இலிருந்து மீள்விக்கப்பட்டது