பக்கம்:பாரதித் தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாரதி தமிழ்


ளெல்லாம் பராசக்தியின் வடிவங்களாகவே காட்சியளிக்கத் தொடங்குகின்றனர்.

1907-ல் முதல் தடவையாக பாரதியாரின் மூன்று தேசியகீதங்கள் ஸ்வதேச கீதங்கள் என்ற பெயருடன் ஒரு துண்டுப் பிரசுரமாக வெளியாயின. இப்பிரசுரம் வெளியாவதற்கு வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் அவர்கள் நூறு ரூபாய் வழங்கியுள்ளார். துண்டுப் பிரசுரத்தை இலவசமாகப் பள்ளிகளுக்கும் பொது நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

1908-ல் பாரதியார் ஸ்வதேச கீதங்கள் என்ற நூலை வெளியிடுகிறார், பதினான்கு பாடல்கள் அடங்கிய இதுவே அவருடைய முதல் நூலென்று கொள்ளலாம். அந்நூலை அவர்தம் குருவாகிய நிவேதிதாதேவியாருக்கே ஸமர்ப்பண்ம் செய்திருக்கிரார். “ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்ம நிலை விளக்கிய-தொப்ப, எனக்குப் பாரத தேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி யுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறுநூலை ஸ்மர்ப்பிக்கின்றேன்’ என்று அவர் எழுதியுள்ளார்.

1908-ஆம் ஆண்டிலேயே பாரதியாரின் உரை நடைச்சிறு வெளியீடுகள் இரண்டு தோன்றின சூரத் காங்கிரஸிற்கு பாரதியார் சென்று திரும் யதின் விளைவாக அவை உருவாயின. ஒன்று எங்கள் காங்கிரஸ் யாத்திரை மற்றாென்று புதிய கட்சியின் கோட்பாடுகள். பாலகங்கரதர திலகர் 1907-ல் செய்த ஒரு சொற்பொழிவின் தமிழாக்கமே இந்த இரண்டாம் வெளியீடாகும்.

1909-ல் வெளியான ஜன்ம பூமி என்ற நூலில் பாரதியார் தமது குருவின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கே அந்நூலையும் ஸமர்ப்பிக்கிரார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/28&oldid=1539888" இலிருந்து மீள்விக்கப்பட்டது