இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புதுச்சேரியில் புயற் காற்று
சி. சுப்பிரமணிய பாரதி எழுதியது
27 நவம்பர் 1916 தள கார்த்திகை 13
இரவு
நள வருஷம் கார்த்திகை மாதம் 8-ம் தேதி புதன்கிழமை இரவு புதுச்சேரியில் யுகப் பிரளயத் தைப் போலே யிருந்தது.
நெடும் பொழுதாக - புதன்கிழமை மாலை தொடங்கியே - மழையும் காற்றும் கடுமையாகத் தான் இருந்தன. இடைவிடாத மழை. இடை விடாத காற்று.
இரவு பதினொரு மணிக்குமேல் .ெ பரி தாக வளர்ந்துவிட்டது. ஊழிக் காற்று : படீல், படீல், L/to.60.
வீடுகள் இடிந்து விழுகின்றன : மரங்கள் சாய் கின்றன ; காந்த விளக்குக் கம்பி அறுந்து போகிறது. நான்கு சு வ ர் க ளு ம் மேலே விழுந்துவிடும் போலிருந்தன ; நல்ல கோட்டை போன்ற வீட்டிலே இருந்தேன். இருந்தாலும் சத்தம் பொறுக்க முடிய வில்லை ஊழிக் காற்று. மருத்துக்களின் களியாட்டம், பேரச்சம்.
பா. த.-15