பக்கம்:பாரதித் தமிழ்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைகள்

சக்திதாலன்

18 பிப்ரவரி 1921 ரெளத்திரி மாசி 7

பொம்மிடி ரெயில்வே விபத்து

“தென் இந்தியா ரெயில்வே, பொம்மிடியில் நடந்த பயங்கரமான விபத்தைக் குறித்து நம் நேயர் கள் சிலருக்கு மறதி யேற்பட்டிருக்கக்கூடும். அது நடந்து இப்போது ஏறக்குறைய இரண்டு மாஸங்க ளாகின்றன. அதில் 40 பேருக்கு மேலே இறந்து போனார்கள். ஏராளமான பொருட் சேதம் ஏற்பட் டது. ரெயில்வே பாதுகாப்பு விஷயத்தில் புது முறைகள் அனுஸ்ரிக்கப்படுவதாகச் சொல்லுகிறார் கள். விசேஷத் தகுதி பெற்ற நிபுணர்களென்று உயர்ந்த சம்பளம் வாங்கும் ஐரோப்பிய மேற் பார்வை உத்யோகஸ்தர்கள் அதி ஜாக்ரதையுடன் வேலை செய்வதாகத் தெரிவிக்கிரு.ர்கள். பொது உத்தரவுகளும் தொழிற் கட்டளைகளும் மலிந்து போயின. இவ்வளவையும் மீறி மேற்படி விபத்து நேர்ந்திருப்பதினின்றும், ரெயில்வே பராமரிப்பில் எங்கோ ஒரு மூலையில் பிழை யிருப்பதாக விளங்கு AD5l. ஸம்பவம் நடந்த காலத்தை யொட்டி ஸ்தலத்திலேயே ஒரு கலப்பு விசாரணை நடத்தப் பட்டது. அதில் பத்திரிகைப் பிரதிகளும் பொது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/465&oldid=605913" இலிருந்து மீள்விக்கப்பட்டது