பக்கம்:பாரதித் தமிழ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பாரதி தமிழ்

பஞ்சபாண்டவர் காலத்தில் ஒரு ஸ்திரீ பல புருஷரை விவாகம் செய்து கொள்ளலாம். வேத வியாளர் காலத்தில் தமையன் பிள்ளையில்லாமல் இறந்து போனல் தம்பி அவனுக்கு ஸ்ந்ததி ஏற் படுத்திக் கொடுக்கலாம்.

வி வ ா மி த் தி ர ர் காலத்தில் கூத்திரியர் அறிவினுல் பிராமணராகி விடலாம் மனுஸ் மிருதியின் விதிகள் வேறே. பராசரர் விதிகள் வேறே. நடப்பிலுள்ள வைத்தியநாத தீகரிதர் விதிகள் வேறே இங்கிலாந்துக்கு வேறு ஸ்மிருதி. ப்ரான்ஸ் தேசத்துக்கு வேறு. பாரnகத்துக்கு வேறு. நமக்கு வேறு. நமக்குள் வடநாட்டில் வேறு. தென்னுட்டில் வேறு. வைஷ்ணவருக்கு வேறு. ஸ்மார்த்தருக்கு வேறு.

சாஸ்திரங்களேயெல்லாம் காலத்துக்குத் தகுந்த படி மாற்றிக்கொண்டு போகிருேம். வேதத்தைத் தான் மாற்ற முடியாது; உண்மையான வேதமாக

இருந்தால்.

தாட்டு விதி

நாட்டு விதி என்பது அர்த்த, நீதி சாஸ்திரங் களின் விதி. இதனைத் தற்காலத்தோர் அரசியல் விதி யென்று சொல்லுகிறார்கள். அதுவும் சாஸ்திர விதியோடு சேர்ந்ததுதான். ஆனல் மற்ற இலக்கணம் முதலிய சாஸ்திரங்களின் விதிகளைக் காட்டிலும் அரசியல் விதிகள் மிகவும் விரைவுடன் மாறுபடுவ தால் இதனைத் தனியாக ஒரு பகுதியாக்கும்படி நேரிட்டது. எனவே, தெய்வ விதிக்குப் பரிபூரண மாக உட்பட்டு சாஸ்திர விதிகளையும் நாட்டு விதி களையும் மேன்மேலும் புத்திசாலித்தனமாகச் சீர் திருத்திக்கொண்டு வந்தால், மனுஷ்ய ஜாதிக்கு rேமமுண்டாகும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/209&oldid=605509" இலிருந்து மீள்விக்கப்பட்டது