பக்கம்:பாரதித் தமிழ்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 பாரதி தமிழ்

கடனுதவி கிடைப்பது நிறுத்தப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது. இங்கிலாந்து முதலிய ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் த மது செல்வத்தை யெல்லாம் மஹாயுத்தத்தில் இழந்து போயின. அமெரிக்காவிடம் கடன் கேட்கப் போனல், “ஸ்மா தானத்தை வேண்டாத தேசங்களுக்குப் பணம் கொடுக்க மாட்டேன்’ என்று சொல்லுகிறது. ஒவ் வொரு சிறு ராஜ்யத்துக்குங்கூட விடுதலை யேற் படுத்திக் கொடுப்பதற்காக மஹாயுத்தம் நடத்து கி ருே .ெ ம ன் று உருப் போட்டுக்கொண்டிருந்த ஆங்கிலேய மந்திரிகள் இப்போது ஐர்லாந்துக்கு ஸ்வ ராஜ்யம் கொடுக்க மறுப்பதைப் பார்த்து அமெரிக் காவில் பலர் ஆச்சரியப்படுகிரு.ர்கள். இப்படிப்பட்ட மந்திரிகளின் ஆதிக்கத்தின் கீழ் நடைபெறுவது கொண்டே'ஸர்வதேச சங்க”த்தினிடம் அமெரிக்கா வுக்கு நம்பிக்கை போய்விட்டதென்று தோன்று கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/351&oldid=605735" இலிருந்து மீள்விக்கப்பட்டது