பக்கம்:பாரதித் தமிழ்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பாரதி தமிழ்

இவளுக்குப் போன மாசம் வரையிலே ஒரு குறையும் கிடையாது. ஸாதாரணமாக இருந்தாள். திடீரென்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை தலை சுற்றி ஆடத் தொடங்கிவிட்டாள்.

‘ஹா’ என்று கத்துவதும், சிரிப்பதும், பிதற்று வதும் பெரிய அமளியாய் விட்டது. செட்டியார் என்னே வந்து கூப்பிட்டார். நான் பார்க்கப் போனேன். என்னைக் கண்டவுடன் காந்திமதி கட கட-வென்று சிரித்தாள். கண்ணேப் பார்த்தால் வெறி பிடித்தவளேப் போலிருந்தது.

“காந்திமதி, உனக்கு என்ன செய்கிறதம்மா?” என்று கேட்டேன். மறுமொழியில்லை. இரண்டு மூன்றுதரம் வற்புறுத்திக் கேட்டபிறகு, “ஹா, கா தாசனு? வா வா, தூங்குகிருயா? எழுப்ப வந்தேன், காளிதாசனு? ஒஹோ; க்வியெங்கே, என்மேலே பாட்டுப் பாடு நான் புதுப் பேய்...........ஆஹா வெனேஜெலோஸ், மடாதிபதி, தென் ஆப்பிரிகா, வீணை, திருச்சிளுப்பள்ளி பாட்டுப் பாடு” என்று எதெல்லாமோ சொன்னுள். நான் திகைத்துப் போய்விட்டேன்.

“எப்படியிருந்த த்தி!’ என்று சொல்லி Tஎலித் குஞ்சு செட்டியார் கண்ணிருதிர்த்தார். ‘ஏனம்மா? பிதற்றுகிருயே, உனக்கு உட்ம்பு என்ன செய்கிறது?” என்று மறுபடியும் கேட்டேன்.

‘எனக்கு உடம்பு ஒன்றுமில்லை. நான் புதுப் பேய். உங்களுக்கெல்லாம் நோய் பிடித்திருக்கிறது. நான் அதை நீக்கிவிட வந்தேன். விபூதி கொண்டு வா’ என்று காந்திமதி அலறத் தொடங்கிள்ை. எலிக்குஞ்சு செட்டியார் ஒரு பித்தளைத் தட்டிலே விபூதி கொண்டுவந்து என் கையிலே கொடுத்தார். நான் பெரிய மந்திரவாதி என்று அவருடைய அபிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/181&oldid=605467" இலிருந்து மீள்விக்கப்பட்டது