பக்கம்:பாரதித் தமிழ்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்து தர்மம் 301

கொண்டு பிறருடைய கப்பல்களைத் தகர்த்தால் நாளை மற்றாெரு ஜாதியார் ஆயிரம் ஸப்மரீன் கட்டி நம்முடைய கப்பல்களை நொறுக்கிப் போடுவார்கள். பாம்பைக் கொல்ல ஒரு கீரிப் பிள்ளையுண்டு; பகை பகையை வளர்க்கும். நாம் மற்றவரை அடிமைப் படுத்தினல் நம்மை அடிமைப்படுத்த வேறு யாரே னும் முளைப்பார்கள்.

இவ்வுலகத்தில் நாம் செய்கிற ஒவ்வொரு செய் கையும், ஸ்வ்ப்ரயோஜனத்தைக் க ரு தா ம ல், லோகோபகாரத்தை முன்னிட்டுக் கொண்டு செய்ய வேண்டும். தீராத ஆவலும், அவஸ்ரமும், ஒயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாக மாட்டாது. சரியான நாகரிகத்துக்கு சாந்தியே ஆதாரம். யந்திரப் பீரங்கிகளும் ஸ்ப்மரீன்களும் நாகரிகத்துக்கு அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங் களும் ஆகாச வெடிகுண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல; அவை மனிதனுக்குப் பகை. மனுஷ்யன யும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குண முடையன.

கர்வத்தினலே மரணம் உண்டாகும். அடக்கம் பொறுமை ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்ய ஜீவனையும் விளைக்கும். இப்படி நூற்றுக் கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளை நாம் உலகத்தார் கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்த ஸமயத்தில் மனுஷ்ய ஸமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக் கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாருமில்லை. கண்ணைத் திறந்து பூமண்டல முழுதையும் ஒரே பார்வையாகப் பார்த்தால் நான் சொல்வதுண்மை யென்பது தானே விளங்கும். இவ்விஷயத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/300&oldid=605657" இலிருந்து மீள்விக்கப்பட்டது