பக்கம்:பாரதித் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11S

பாரதி தமிழ்


மீட்டிங்கைப்பற்றித் தகவல் கொடுக்க வேண்டு மென்று மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யர் சொன்னதைக் கூட ஜனங்கள் அங்கீகரிக்காமல் கோபமடைந்தார்கள்.

3. மயிலாப்பூர் வக்கீல்கள் தாம் ஜனத் தலைவர்கள் என்று கனவு கண்டு கொண்டிருந்தது பொய்க்கனவென்பதை அறிந்துகொண்டார்கள்.

4. ஸ்ர்க்காரிலே ஸர் என்றும் உர் என்றும் பட்டம் பெற்றுத் திரிந்தவர்களையெல்லாம் ஜனங்கள் மதிப்புடன் நடத்திய காலம் போய் இப்போது அவர்களைப் பகிரங்க ஸ்தானங்களிலே பேசவொட்டாத நிலைமைக்குக் கொண்டுவந்து விட்டார்கள்.

5. இங்கிலீஷிலே பேசக்கூடாது. தமிழ் நாட்டிலே ஜனத் தலைவர்கள் என்று பெயர் வைத்துக்கொண்டு வருவோர் பொது விஷயங்களைப் பற்றித் தமிழிலேயே பேசவேண்டுமென்று ஜனங்கள் வற்புறுத்தினார்கள்.

6. ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். சென்னை மாணுக்கர்களிலே பெரும்பாலார் வெளியூருக்குச் சென்றிருந்த படியால் பழைய கட்சியார் இம்மட்டோடு பிழைத்தார்கள், ஒரு வாரத்திற்குமுன் இந்தப் பொதுக்கூட்டம் நடந்திருக்குமானால் நமது மயிலாப்பூர் நண்பர்களின் ஸ்திதி இன்னும் வேடிக்கையாக முடிந்திருக்கும். லாலா லஜபதிராய் தீபாந்திரத்துக்குப் போவதைப் பற்றி ஜனங்கள் மனது கொதித்துக் கொண்டிருக்கும்போதுகூட இவர்கள் சர்க்காராரை ஸ்றஸ்ரநாமம் .சொல்லி அர்ச்சனை செய்வதுதான் சரியான பாதையென்று நினைப்பது வினோதமாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/117&oldid=1539934" இலிருந்து மீள்விக்கப்பட்டது