கோபங்கா 309
சொன்னல் யாருக்குமே வேடிக்கையாகப் புலப் படாதா?
அப்போது என்னுடன் குள்ளச்சாமி எ ன் ற யோகீசுரர் இருந்தார். அவ்ர் என் மன நிலையை நான் சொல்லாமலே தெரிந்து கொண்டு பின்வரு மாறு சொல்லலாயினர்:
“இதோ, போகிருனே, இவன் போன ஜன் மத்தில் திருதராஷ்ட்ர் ராஜனக இருந்தான். அவனுடன் போகிருளே, அவள் காந்தாரியாக இருந்தவள்.
“போன ஜன்மத்தில், தம்பி மக்களுடைய சொத் தைத் தன் பிள்ளைகள் குதினால் அபஹரிக்கையிலே தான் ஒன்றும் தடுத்துச் சொல்லாமல் பிள்ளை துரியோதனன் பக்கம் சேர்ந்துகொண்டு வேடிக்கை பார்த்த குற்றத்துக்காக விதி. இவனை இந்த ஜன் -மத்தில் பிக்சைக்காரனாகவும் பிறவிக் குருடனகவும் செய்தது. காந்தாரி பதிவிரதையாகையாலே தானும் கூட வந்தாள். ஐந்து வயதுக் குழந்தை கோலைப் பிடித்துக்கொண்டு போகிருனே அவன்தான் விகர் ணன்’ என்றார்,
அப்போது நான்:-"ஐயோ, திருதராஷ்டிரன் மஹாவித்வானுயிற்றே. அவனுக்கிந்த கதி வர லாமோ?” என்று சொல்லி வருத்தப்பட்டேன்.
அப்போது குள்ளச்சாமி சொல்லுகிறார்:"போன ஜன்மத்தில் ராஜாவாகவும் பண்டிதகைவும் இருந்தான். ஆனல் இந்த ஜன்மத்தில் ஏழையாகப் பிறந்து பலவிதக் கஷ்டப்பட்டுப் பிறகு பூர்வ புண்ணிய சேஷத்தால் சதுரகிரியில் ஒரு மஹரிஷி யிடம் பகவந் நாமத்தின் மஹிமையைத் தெரிந்து கொண்டு, உண்மையான பக்தி மார்க்கத்தில்