இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம் கிருஷ்ணன்
109
- புறப்பட்ட பித்திநான்...என்னைத் தொடர்ந்து துன்புறுத்துவானேன்,
- என்பிரிய சோதரரே!”
- “உடுபுடைவை துறந்து, நிர்வாணமானாலும்,
- கருங்கூந்தலை விரித்த உடலைமறைப்பதேன்?
- உள்ளத்தில் உடலாசை உணர்வுகள் வைத்துப்
- புறத்தில் துறவென்று ஆடை துறந்தாயே!”
என்று கேலி செய்து, வம்புக்கிழுத்தவருக்கு மாதேவியின் பதிலும் பாடல்களில் பிரதிபலிக்கிறது.
- “மேனி வாடிக்கருகிப் போனாலும்,
- மேவும் இளமை மினுமினுத்தாலும்,
- என் உள்ளத்தின் உள்ளே துயஒளி போதுமே!
- இந்தமேனி எப்படியானாலும் சென்னமல்லிகார்ச்சுன தேவருக்கே உரியது.
- உள்ளம் பழுத்தாலன்றோ தோலின் நிறம்மாறும்!
- ஆசையுணர்வுகள் அடையாளம் காட்டினால் துன்பமாகும் என்று
- அன்பினால் அங்கங்கள் கூந்தல் கொண்டு மறைத்தேன்.
- துன்புறுத்த வேண்டம் அண்ணா!
- சென்னமல்லிகார்ச்சுன தேவரின் உள்ளத்தின் உள்ளே சேர்ந்தவள் இவளே...”
இந்தப் பாதையில்லாப் பெருவழியில், தேவி, மேற் கொண்ட ஆன்மீக இலட்சிய யாத்திரை அநுபவங்கள், தாப உணர்வுகள் போராட்டங்கள் யாவுமே கவிவாசகங்களாக கன்னட இலக்கியத்தின் அருங்குவியலாக வாய்த்திருக்கின்றன.