பக்கம்:பாரதித் தமிழ்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியார் வாழ்க்கை வரலாறு

57





கோயிலுக்குச் செல்லுவார். கோயில் யானைக்குப் பழம் தேங்காய் அன்புடன் அளிப்பார்.

அந்தக் கோயில் யானைக்கு மதம் பிடித்திருந்த ஒரு நாளிலே அது பாரதியாரை இழுத்துக் கூடத்திற்குள் தள்ளிவிட்டது. குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் இதை எப்படியோ அறிந்து ஒரே பாய்ச்சலாக அங்கு வந்து பாரதியாரை வெளியில் எடுத்து வந்தார். பாரதியாருக்கு மண்டையிலும் உடம்பிலும் காயம்.

காயம் ஆறிப் பாரதியார் பிழைத்தார். ஆனால் இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நெடுநாள் உலகில் வாழவில்லை. வயிற்றுக்கடுப்பு நோய் அவரை மரணப் பிடியாகப் பிடித்தது. இளைத்துப் போயிருந்த அவருடைய உடம்பு இதன் பிடியை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளச் சக்தியற்று அதற்குப் பணிந்து விட்டது. 1921 செப்டம்பர் 10-ஆம் தேதி தேசபக்தன் ஆசிரியராகவிருந்த வ.வெ. சு. ஐயர் ராஜத்துவேஷத்திற்காகக் கைது செய்யப் பட்டார். கைது செய்யப்படு முன்பே அவர் ஆசிரியர் பதவியினின்றும் விலகிவிட்ட போதிலும் தேசபக்தனில் இவர் இருந்த காலத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக்காகச் சிறை புக நேர்ந்தது. சிறைக்குப் போகுமுன் ஐயர் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த பாரதியாரைப் பார்க்க வந்தார். அடுத்த நாள் இரவு சுமார் 1-30 மணிக்கு பாரதியாரின் தூல வாழ்க்கை முடிவுற்றது.

பாரதியாரின் பிரிவைக் குறித்துச் சுதேசமித்திரனில் 1921 செப்டம்பர் 12-ஆம் தேதியில் ஒரு குறிப்பு வெளியாகியிருக்கிறது : “ தமிழ் நாடு போற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை நேற்றிரவு துறந்து விண்ணவருக்கு விருந்தாகி விட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது. சில தினங்களாக நோயினால் வருந்திக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/57&oldid=1539929" இலிருந்து மீள்விக்கப்பட்டது