Լ16մ 157
இருதிறத்தாருக்குள்ளேயும் ஸ்ஹோதர உணர்ச்சி மேன்மேலும் பெருகி வருவதற்கு வேலை செய்தால் தேசத்துக்கு அளவிறந்த நன்மையுண்டாகும்.
தமிழ் நாட்டில் நாடகம் தமிழ் நாட்டில் நாடகப் பாட்டுக்கள் நாள் தோறும் நூற்றுக்கணக்காக அதிகப்பட்டு வருகின் றன. ஆனல், இவற்றிலே தெளிவு, அறிவு வளம், கல்விப் பயிற்சி, சொல் நயம், ரஸ் வொளி முதலிய லக்ஷணங்கள் கொஞ்சமேனும் காணப்படவில்லை. வண்டிக்காரன் பாட்டு, பாம்புப் பிடாரன் பாட்டு, குறத்திப் பாட்டு முதலிய பாமரப் பாட்டுக்களிலே இலக்கணப் பிழைகள் இருந்தபோதிலும் கவிதா ரஸம் அமைந்திருப்பது காண்கிருேம். இந்த நாடகப் பாட்டுக்கள் வெறும் பாமரமாக இருப்பதுடன் கவிதா ருசி அனுகூடக் கலக்காமல் பெரிய பீடை யாக ஏற்பட்டிருக்கின்றன. மேலும் த மி ழ் ப் பாஷையின் இயல்புக்குப் பொருந்தாத மெட்டுக் களில் நாடகக்காரருக்கு எப்படியோ பிரியமுண் டாகியிருக்கிறது. “இதற்கெல்லாம் விமோசனம் என்ன?’ என்று ஒரு தமிழ்க் கவிஞரிடம் கேள்வி போடப்பட்டது. அதற்கு அவர் சொல்லிய மறு மொழியை இங்கெழுதுகிறேன்.
“இந்த விஷயத்தில் நாடகக்காரரைக் குற்றஞ் சொல்வது நியாயமில்லை. பெரும்பாலும் நமது நாட் டில் ஏழை வாலிபர்கள் ஸங்கீதத்திலும் உல்லாஸத் தி லு ம் பிரியமுடையவர்களாக இருக்கும்போது ஜீவனத்துக்காகவும், சில சமயங்களில் உல்லாஸத்தின் பொருட்டாகவும் நாடகங்களிலே சேர்கிரு.ர்கள். இவர்களுக்கு ஏராளமான பாட்டு வேண்டியிருக் கிறது. பழைய மெட்டுக்களும், அர்த்தம் தெரியாத கடுஞ் சொற்களும் இவர்களுக்கு அவசியமில்லை.