இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குதிரைகள் சென்ற திசைகளில் ஒன்றை நோக்கி ஒடினான்; இங்குமங்கும் தேடினான். பயனில்லை ! பிறகு, மற்றொரு குதிரை சென்ற தெருவழியே சென்றான். அங்கும் தேடியலைந்தான். குதிரை கிடைக்கவில்லை.
வெகு நேரம் தேடினான். இரவும் வந்துவிட்டது. அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அழுகை அழுகையாக வந்தது.