பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

173


நூல் : திருச்சிறுபுலியூர் உலா (1951)
குறிப்புரை : கி. இராமாநுஜையங்கார்
லட்சுமி - மலர்மகள் (1951)

திருச்சி - டவுன்ஹால் அரசினர் மகளிர் உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் திருமதி லட்சுமி நித்தியானந்தம் M.A., BT, அவர்கள் 1951ஆம் ஆண்டு முதல் மலர்மகள் என்னும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தவர். இப்போது இவர் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை உறுப்பினர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.

எம்பிராய்டரி - பூந்துகிற் கலை

மனிதனுடைய தேகத்திற்கும் மனதிற்கும் இன்ப மளிப்பவையெல்லாம். தெய்வத்திற்குப் பொறுக்காது என்பது தலைகால் தெரியாத நம்பிக்கைகளில் ஒன்று. இதையொட்டித்தான், சிறு பெண்கள் புத்தகம் படிப்பதும், பாட்டு, நாட்டியம், சிற்பம், ஒவியம், பூந்துகிற்கலை (எம்பிராய்டரி) இவற்றைக் கற்பது எல்லாம் வீட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடும் என்று பலர் நினைப்பதும், நாடகம் பார்த்தாலும் சினிமா பார்த்தாலும் மனிதன் கெட்டுப் போவான் என்று நினைப்பதும் இதே மாதிரிதான்.

நூல் : குட்டிக் கட்டுரைகள் (1951), பக்கம் : 61, 62
நூலாசிரியர் : வித்வான் ந. சுப்ரமணியன் எம். ஏ.
Book Post – அவிழ்மடல்

1952ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் உருவப்படத்திறப்புவிழா அழைப்பிதழில் Book-post என்ற சொல்லுக்கு 'அவிழ்மடல்’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது. அச்சொல்லை முதன் முதலில் உருவாக்கித் தமிழுலகிற்கு உலவவிட்டவர் க. அரசுமணி, இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் இவர், பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன், பேராசிரியர் லெப. கரு. இராமநாதஞ் செட்டியாரின் மாணவர்.

அவிழ்மடல் :சொல்லாக்கம் - புலவர் க. அரசுமணி (1952)