பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

23

சென்ற போது வழியில் மாண்டுவிட்ட உலகப்பெருவீரனான அலெக்சாண்டரின் ஆசான் அரிஸ்டாட்டில் என்ற அந்த பல்கலை ஆசான்!

பல நாட்டுப் பலமிக்க மன்னர்கனை வீழ்த்தி அவர்களை அதிகாரத்தின் ஆணவத்தால் அடிமைகளாக்குவதை காட்டிலும், பல நாடுகளும் பின்பற்றும் அறிவாசானாக இருப்ப்தே சிறந்தது என்ற விருப்பமும், அவன் மீதும் நம்பிக்கையும் கொண்டவர் அரிஸ்டாட்டில் என்ற தத்துவ ஞானி!

அந்த வித்தகர் தாம் கண்டறிந்த உண்மைகனைத் தொகுத்துப் பலநூல்களை வெளியிட்டு, அறிவியல் கலை வளர தொண்டாற்றிய அற்புதமான விஞ்ஞானி அரிஸ்டாட்டில்!

வானவியலுக்கும், தத்துவ ஞானத்திற்கும், தர்க்க வாதத்திற்கும், வரலாற்றுணர்வுகளுக்கும், விஞ்ஞானத் துறை வித்தகத்துக்கும், ஆய்வியல் எனும் சுரங்க ஆழத்திற்கும், தாவரவியல், விலங்கியல், போன்றவற்றுக்கும் அளப்பரிய தொண்டாற்றிய தொண்டர் அரிஸ்டாட்டில்!

உலகத்திற்கு அவர் செய்துள்ள அறிவுச் சேவைகள் அரிதரிது! அதனால்தான் உலகம் போற்றும் கற்றோர் ஏற்று மதிக்கும் கல்விமானாக மட்டும் அல்ல, அவர் பிறந்த கிரீஸ்நாடே கூடி அரிஸ்டாடிலை அறிவுத் தெய்வமாக மதித்துப் போற்றியது எனலாம்!

அரிஸ்டாட்டிலின் உண்மைகள் மாற்றக் கூடாதவை; அவர் கூறிய உண்மைகள் அசைக்க முடியாதவை; அவர் மொழிகளை எதிர்ப்பவர். அல்லது மறுப்பவர், அனைவரும் சமுதாய விரோதிகளே; யார் அவரது கருத்துக்கு எதிர் கருத்துப் பேசுகிறார்களோ அவர்களை அழிப்பதே காலத்தின் சட்டம்! அழிக்க முடியாமல், 'போகட்டும் போ' மன்னிக்கப்படுவர்களானாலும் இப்படி அவர்களை