பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

39


அந்த நட்சத்திரங்கள், வியாழன் கோளைச் சற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியந்தார். ஆனால், அவை என்ன; நட்சத்திரங்கள் தானா? அல்லது வேறு ஏதாவது பொருள்களா என்று சந்தேகப்பட்டார்.

வியாழனைச் சுற்றிவரும் அந்த சிறு சிறு பொருட்கள் நட்சத்திரங்கள் அன்று; அல்லது வேறு கோள்களும் அல்ல. எனவே, அவை உறுதியாகச் சந்திரன்களாகவே இருக்க வேண்டும் என்று அவர் மேலும் ஆராய்ந்து கொண்டே இருந்தார்.

அவரது ஆராய்ச்சியின் இறுதி ஒரு முடிவுக்கு வந்தது. பூமிக்குச் சந்திரன் இருப்பது போலவே, வியாழன் மண்டலத்திலும் சந்திரன் இருக்கிறது என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

பூமிக்கு ஒரே சந்திரன் தான் இருக்கிறது; ஆனால், வியாழன் கிரகத்துக்குள் நான்கு சந்திரன்கள் இருக்க முடியுமா? என்ற சந்தேகம் மீண்டும் அவருக்கு உண்டாயிற்று, பிறகு நான்கு நிலாக்கள் இருப்பது உண்மைதான் என்றே முடிவு செய்தார்.

அப்படியானால், ஒவ்வொரு சந்திரனும் வியாழன் கிரகத்தைச் சுற்றிவர எவ்வளவு காலமாகிறது என்பதையும் கணக்கிட்டுக் கூறினார்.

ஒரு சந்திரன் வியாழனைச் சுற்றி வர, நாற்பத்திரண்டு மணி நேரங்கள் ஆகின்றன என்றும், மற்ற மூன்றும் வியாழனைச் சுற்றி வர பதினேழு நாட்கள் ஆகின்றன என்றும் கணக்கிட்டுக் கூறினார்.

கலீலியோ கூறிய இந்த வியாழன் கிரக அதிசயங்களைக் கேட்ட மற்ற ஆராய்ச்சியாளர்கள் மிகவும் ஆச்சரியப் பட்டார்கள்! இப்படியும் ஓர் அதிசயம் வான வெளியில் நடக்கின்றதா என்று மக்கள் பிரமித்தார்கள்!