பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

9


‘சூரியனும் தட்சத்திர இனத்தைச் சேர்ந்ததே, சூரியனைப்போல எண்ணற்ற நட்சத்திரங்கள் விண்வெளியில் இருக்கின்றன என்றெல்லாம் விவரமாக அவர் எடுத்துக் கூறியபோது, எவருமே அதனை ஏற்கவில்லை! ஏற்றுக்கொண்டால்தான் அவனுக்கு மரியாதை வந்து விடுமே!

இந்த வான சாஸ்திர மேதைகள் கண்டு பிடித்தவற்றால் என்ன பலன்? பூமி உருண்டை வடிவானது என்றால், அதைச் சுற்றிப் பயணம் செய்தவர்கள் புறப்பட்ட இடத்திற்கே மறுபடியும் வந்த சேரவேண்டும்! இவ்வாறு புறப்பட்ட பயணிகள் மீண்டு வர இயலுமா? எவ்வளவு தடிப்பு பூமி இருக்குமோ? பூமியைச் சுற்றிவர எவ்வளவு காலம் ஆகுமோ? என்பனவற்றையெல்லாம் உலகத்தினர்கள் சிந்திக்கலானார்கள்.

இந்த வினாக்களுக்கு பதில்காண, முதன் முதலாக இத்தாலியரான மார்க்கோ போலோ போன்றவர்கள் 1272-ம் ஆண்டு உலகை சுற்றிவர கால் நடையாகவே பயணம் புறப்பட்டார்கள்.

ஐரோப்பாவிலே இருந்து புறப்பட்டு கிழக்கே நெடுந்தூரம் காத்தே Cathaya என்ற இன்றைய வடசீனாவரை சென்றார்கள்.

அந்தப் பிரயாணிகள் தேரில் பார்த்த விஷயங்களை எல்லாம் தங்களது குறிப்பேட்டில் விவரமாக எழுதியுள்ளார்கள். நான் கண்ட நாடு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலப்பரப்பு உள்ளது என்றும், அது செழிப்பான் பூமி என்றும் விவரித்துள்ளார்கள்.

'மார்க்கோ போலோவின் பயணங்கள் என்ற பயண நூலில் இவற்றை எல்லாம். அவர் விளக்கமாக எழுதியிருப்பதுடன், அது உலகம் முழுவதும் விரைவில் பரவியது!