பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி. கலைமணி

51




எண்ணற்ற நோயாளிகள் லிஸ்டரின் இதுபோன்ற புதிய சிகிச்சையால் உயிர் பெற்று, மரணத்திலே இருந்து மீண்டார்கள்.

இந்த முறைக்கு லிஸ்டர் வைத்த பெயர் என்ன தெரியுமா? ‘ஆண்டிசெப்டிக் சர்ஜரி’ என்று பெயரிட்டார்.

அதாவது ‘நச்சுத்தடை அறுவை’ முறை என்று அதற்குத் தமிழில் பெயரிடப்பட்டது. இந்த சிகிச்சை முறை ஆயிரக் கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்றும் சக்தியைப் பெற்றிருந்தது.

மருத்துவ மனைகள் மூடப்பட்டன

கிளாஸ்கோ நகரிலுள்ள இன்பெர்மரி மருத்துவ மனையில்; லிஸ்டர் தனது புதிய முறைப்படியே நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுத்து வந்தார்.

மற்ற மருத்துவ மனைகளில் உள்ள மருத்துவர்கள் தங்களது பழைய முறையிலேயே சிகிச்சையைச் செய்து வந்ததால், நோயாளிகளின் இறப்பு முறை சதவிகிதம் அதிகமாகவே இருந்தது.

ஜோசப் லிஸ்டரிடம் வரும் நோயாளிகள் உயிர் பிழைத்து நடந்து போகிறார்கள். ஆனால், மற்ற மருத்துவ மனைகளின் நோயாளிகள் இறப்பு அதிகரித்துக் கொண்டே போகின்றன என்ற காரணத்தால் மற்ற மனைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன.

லிஸ்டரின் இந்தப் புதிய ஆண்டிசெப்டிக் சர்ஜரி முறையை, மற்ற மருத்துவ மனைகளும் வேகமாகப் பின்பற்ற ஆரம்பித்து விட்டன. அதனால் மரண சதவிகிதமும் குறைந்தது; மக்கள் உயிர்களும் மீட்கப்பட்டன.

மற்ற மருத்துவ மனைகளில் மட்டும் நோயாளிகள் அதிகமாக இறந்து போவதற்கு என்ன காரணம்? என்று மருத்துவர்கள் சோதனை செய்தார்கள். அதற்கான விசாரணைக் குழுக்களும் ஆங்காங்கே அமைக்கப்பட்டு விசாரணைகளும் நடந்தன.

முடிவு என்ன தெரியுமா? மருத்துவ மனைகள் கட்டப் பட்டுள்ள இடங்கள் சுகாதாரமற்ற இடங்கள் என்றும், மருத்துவ