பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கலீலியோவின்

களும் மற்ற மன்னர்கள் எனப்படுவோரும், உண்மையைக் கூறியதற்காக, அந்த வான நூல் வல்லார்களைக் கழுமரத்தில் ஏற்றிக் கொன்றுவிட்டார்கள், எரி நெருப்பிலே தள்ளிச் சித்திரவதை செய்துக் கொலை செய்தார்கள்!

இந்த மனித உயிர்க் கொலை நீண்ட காலமாகவே நீடித்தது. ஆனாலும், உண்மை விளம்பிகள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மக்களுக்குரிய வழிகாட்டிகளாகவே வாழ்ந்துச் செத்தார்கள்!

2. கடற் பயணிகளின் கண்டுபிடிப்புகள்

வான உலகத்தின் நட்சத்திரங்கள், கிரகங்கள் பற்றிய புதுமைகளை உலகுக்கு கூறிய அறிஞர்கள் பலருள், போலந்து நாட்டு வானியல் மேதை கோப்பர் நிக்கஸ் என்பவர் ஒருவராவார்!

இவருடைய வானியல் பாதை ஆராய்ச்சியை: அவருக்குப் பிறகு பின்பற்றியவர் மாவீரர் மட்டுமல்ல, மகாமேதையாகவும் விலங்கியவர்தான்் நாம் படிக்கப் போகும் இத்தாலிய வித்தகர் கலீலியோ என்பவர்!

வானியல் அறிவு மிகப் பழமையான காலத்தில், கீழ்த்திசை நாடுகளிலும் நன்றாக வளர்ந்து இருந்தது. அங்கே இருந்துதான் பெரும்பகுதியான எண்ணங்கள் மேலை நாடுகளுக்கும் பரவின!

கோப்பர் நிக்கர் என்ற அந்த போலந்து நாட்டின் வானியல் ஆய்வாளர், சுமார் 1530-ம் ஆண்டில், நாம் வாழ்கின்ற பூமி தட்டையானது அல்ல, 'அது ஒரு சிறிய கோள்' என்றார்.

பூமியைப் போல பல கோள்கள்! வான வெளியில் இருக்கின்றன. அவை எல்லாமே மிகப்பெரிய சூரியனைச் சுற்றி வருகின்றன என்றார்.