பக்கம்:கலீலியோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

69


★ ஜெர்மன் நாட்டு ஜஸ்டஸ் வான்லை! என்பவர் செயற்கை உரம் தயாரிக்கும் வழியைக் கண்டார். அதனால் விவசாய உலகம் பொன்னுலகமானது.

★ போலந்து நாட்டு மாதரசி மேரி கியூரி, அவரது கணவர் பிரான்ஸ் நாட்டின் பியரி கியூரி இருவரும் சேர்ந்து ரேடியம் என்ற மாமருந்து பொருளைக் கண்டு பிடித்தார்கள். இந்த ரேடியம், நோய்களைத் தீர்க்கவும், அணு அமைப்பைக் கண்டு பிடிக்கவும் அளவு கடந்த வகையில் பயன்பட்டு வருகிறது.

★ இங்கிலாந்து நாட்டில் தோன்றிய சார்லஸ் டாவின், உயிரினத் தோற்றம் Origin of The Species என்ற புகழ்மிக்க புத்தகத்தை எழுதி, உயிரினம் எப்படி படிப்படியாக வளர்கிறது என்று வாதத்தை உலகின் முன்பு வைத்தார்.

★ ஆஸ்திரியா நாட்டின் கிரிகோரி மெண்டல் என்பவர், மக்கள் இனப் பாரம்பரியம் விதிகளை வகுத்துத் தந்தார்.

★ பயங்கரமான வைசூரி நோயைத் தடுக்க இங்கிலாந்து நாட்டு எட்வர்டு ஜென்னர், அம்மை குத்தும் மருந்தும் அதன் கிருமிகள் ஒழிப்பு முறைகளையும் கண்டார்.

★ பிரான்ஸ் நாட்டு லூயி பாஸ்டர், வியாதிகளுக்குக் காரணம் நுண்கிருமிகளே என்ற தத்துவத்தைக் கண்டறிந்தார்.

★ ஜோசப் லிஸ்டரி என்ற ஆங்கில் ரண சிகிச்சை நிபுணர், தொத்து நோய் பரவாமல் இருக்க தடுப்பு மருந்தை முதன் முதலாகக் கண்டு பிடித்துப் பயன்படுத்தினார்.

கா. மா-5