பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

உவமைக்கவிஞர் சுரதா



விசாலாட்சி - அழகிய கண்ணையுடையவள்
நூல் : தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 78
நூலாசிரியர் : பு. த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீஸ்

காலேஜ் தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்)

Phaeton : புரவி வண்டி (புரவி - குதிரை)
மோட்சம் : நல்வீடு
நிகேதனம் : வீடு
நூல் : ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி சந்திரகலாஷைமாலை (1894) பக்கங்கள் : 7, 11, 16.
நூலாசிரியர் : அபிநவ காளமேகம் அநந்த கிருஷ்ணையங்கார் (ஸ்ரீ வானமாமலை மடம், ஆஸ்தான வித்துவான்)
மருபூமி - பாலை நிலம்

அதனிடத்தில் (பிரமத்தினிடத்தில்) மருபூமியில் (பாலை நிலத்தில்) ஜலம், கிளிஞ்சலில் வெள்ளி, கட்டையிற் புருஷன், ஸ்படிகத்தில் வர்ண முதலியவைபோல் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு இந்தக் குணமயமானதும் ஏறக்குறைவன்றி ஒவ்வொன்றும் சமமாயிருக்கிற குணசுரூப மானதும் வாக்குக் கெட்டாததுமாகிய (என்றால், மித்தையானதுமாகிய) மூலப் பிரகிருதி யிருந்தது.

நூல் : மாயாவாத சண்ட மாருதம் (1895)பக்கம் - 137.
நூலாசிரியர் : ஓர் இந்து
பைண்டிங் - கட்டடம்

அநேக வருடங்களாய்ப் பாடசாலைகளிற் கற்கப்பட்டு வருகின்ற மகாலிங்க ஐயர் இலக்கணச் சுருக்கமானது, பலரால் பலவித மச்சிடப்பட்டு, எழுத்து சொன் முதலிய பிழைகளுடன் கூடி நிற்பதைக் கண்டு, தக்க பண்டிதர்களைக் கொண்டு பரிசோதித்து, நந்தேயபாஷைகளின் அக்ஷரங்களிற்கு மிகவுஞ் சிறந்த எஸ்.பி.ஸி.கே. என்னும் யந்திர சாலையிற் பதிப்பித்ததுடன், ஒவோரியலின் கடையிலிலும் அவ்வவ் வியலையெட்டிய பரீகூைடி வினாக்களுங் கூட்டியுளோம். குஜ்ஜிலிக்கடைப் பதிப்பிற்கும் இதற்கும் விலையில் வேற்றுமை சிறிதேயாயினும், காகிதம், அச்சு, திருத்தம், கட்டட முதலியவைகளில் மிகவும் சிறந்ததாயிருக்குமென் றறிவிக்க நாடுகின்றோம்.

- இப்படிக்கு,
அரங்கநாத முதலியார் அண்ட் கம்பனி
சென்னை மே ௴ 1உ. 1-5-1896