பக்கம்:மதன கல்யாணி-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மதன கல்யாணி வசப்பட்டிருக்கும், அப்படிப் போகாமல் அணை போடடது போல அவன் இது வரையில் ஒரு காவல்காரன் காப்பது போல இருந்து இந்த சமஸ்தானத்தைக் காத்து என்னிடம் ஒப்புவித்தானே! அவனை இகழ்வது நன்றி கெட்ட காரியம் அல்லவா? அப்படிச் செய்ய என் மனம் ஒருநாளும் ஒருப்படாது" என்று மனப்பூர்வ மான உருக்கத்தோடு கூறினான. அவனது குணத்தழகைக் கண்ட ஜனங்கள எல்லோரும் விம்மிதம அடைந்து பூரித்து, "அடாடா! என்ன குணம் என்ன மனசு!" என்று வியந்து கூறினா. அவனது வார்த்தையைக் கேட்டு உள்ளம் குளிர்ந்து மயிர் சிலிர்ககப் பெற்ற கலயாணியம்மாள மனம்நைந்து, "ஆகா! இப்படிப்படட பெரும புத்தியும், தயாள குணமும் உனக்கு இருப்பதாலேதான் மலை போல வந்த ஆபத்தெல்லாம் பணிபோல விலகியது. கடைசியில உனனுடைய சம்பத்து எல்லாம் உனக்கே வநது சோந்தது. இப்படிப்பட்ட இளகிய மனசிருநததால்தான, பெற்ற தாய் கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு தானும் தற்கொலை செய்து கொளள அநத மனசு எண்ணியது. தாய் இறந்தாள் எனறு கேட்டு, அதைச் சகியாமல் பிளளையும் தன்னைக் கொன்று கொண்டதாக நாம் இநதப் பூலோகத்தில எப்போதாவது கேட்டதுண்டா தனனுடைய உயிரைக் காட்டிலும் விசேஷமாக என்னை மதிக்கும் இப்படிப் பட்ட அருங்குணச் செல்வனை நான் புத்திரன் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டால், எனக்கு ரெளரவாதி நரகம் அல்லவா சித்திக்கும். அப்பா என் கண்மணியே! ஆகா! இந்த சமஸ்தானமும் மற்ற எல்லாச் சம்பத்தும் எனக்கிருப்பதைப் பற்றி நான் அவ்வளவாக சந்தோஷப்படவில்லை; விலையில்லா மணியாகிய நீ என் வயிற்றில் வந்து பிறந்ததைப் பற்றி நான் அடையும் பெருமையும் ஆனந்தமும் தேவேந்திர பதவியே எனக்குக கிடைப்பதானாலும் உண்டாகப் போகிறதில்லை" என்று மிகுநத ஆசையோடு மதனகோபாலனை இன்னொரு முறை ஆலிங்கனம் செய்து உச்சி முகந்தாள. உடனே மதனகோபாலன், "அமமா தன வால் மயிரில் ஒன்று போனாலும் அந்த அவமானத்தைப பொறாமல் உயிரை விடும் கவரிமானைப் போல, நீங்கள் உயிரை விட்டாகிலும் மானத்தைக் காபபாறறிக கொள்ள முயன்றிாகளே! அப்படிபபடட ஸ்திரீ ரத்னமாகிய தங்களுடைய திருவயிற்றில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/227&oldid=853368" இலிருந்து மீள்விக்கப்பட்டது