பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

543

படைகள் எங்கே? இனிமேல் நம்மால் முடியாது என்று பயந்து ஓடிவிட்டார்களா? அல்லது வேறு எங்காவது மறைந்து சூழ்ச்சி செய்கிறார்களா என்று பாண்டவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

“துரியோதனன் எங்கே போய்விட்டான்? என்ன செய்கிறான்” என்று கண்ணனைக் கேட்டார்கள் அவர்கள். கண்ணன் ஞானதிருஷ்டியால் துரியோதனன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்தை உணர்ந்தான், அவன் அப்போது எதற்காகத் தவம் செய்கிறான் என்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டான்.

“பாண்டவர்களே! துரியோதனன் தவம் செய்கிறான். எதற்காகத் தெரியுமா? போரில் இறந்து போனவர்களை எல்லாம் மீண்டும் உயிர்பெறச் செய்து உங்களோடு போரிடுவதற்காக. அவனுடைய தவம் வெற்றி பெற்று விடுமானால் நிச்சயம் அவன் உங்களை வென்று விடுவான்” - என்று கூறினான் கண்ணன். பாண்டவர்கள் இதைக் கேட்டதும் மலைப்படைந்தனர்.

“துரியோதனனின் தவத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்துவிடுவோம். அவ்வளவு ஏன்? தவம் முடிவதற்குள் அவன் வாழ்வையே முடிந்துவிட்டால் போகிறது. வாருங்கள்! இப்போதே அவன் தவம் செய்து கொண்டிருக்கும் இடத்திற்குப் போய் அவனைத் தொலைத்துவிடுவோம்” - என்றான் வீமன். மற்றவர்களும் அதற்கு இணங்கி உடன் கிளம்பினர். துரியோதனன் தவம் செய்து கொண்டிருந்த ஆலமரத்தடிக்குளத்திற்குச் செல்லும் வழியில் கண்ணபிரான் பாண்டவர்களை அழைத்துக் கொண்டு போனான்.

அங்கே துரியோதனன் முன் போலவே கண்மூடி நிஷ்டையில் ஆழ்ந்திருந்தான். மற்றவர்கள் கரையோரத்தில் ஒதுங்கிக் கொள்ள விமன் மட்டும் நீரருகே இறங்கி அவனை வம்புக்கு இழுத்தான்.