இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம் 42
அவள்வாய் முணுமுணுத்தது.
என்றாலும்
முனிவர் முன்னால்
மண்டியிட்டு வணங்கினாள்.
"அகல்யா!
உனக்குச்
சாப விமோசனம்
வந்துவிட்டது.
உன் கற்பின் மீது
படிந்திருந்த களங்கம்
காலத்தால்
காய்ந்து உதிர்ந்து விட்டது.
நீ -
மீண்டும்
தளிர்க்கப் போகிறாய்”
என்றார் விசுவாமித்திரர்.
அகலிகையின்
உதட்டில்
உலர்ந்த புன்னகை.
நான்
என் வாழ் நாளில்
ஒரே ஒரு
ஆடவனைத் தான்
உள்ளத்தால் வரித்து
ஆராதனை செய்கிறேன்.
என் கற்பின்மீது
களங்கம் படிவது
எப்படி சுவாமி' - என்று