பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

கம் செய்த போது, சில முக்கியமான அரசியல் அதிகாரிகளும், உறவினர்களும் உடன் செல்வது வழக்கம். அவர்களுக் கெல்லாம் இவ்வுண்மை தெரியாமற்போகாது. அப்பிணங்களை அடக்கம் செய்வதற்காகப் பூமிக்கடியில் சமாதி எழுப்பவேண்டும். அப்பணியைச் செய்யும் சிற்பிகளுக்கும் அவ்வுண்மை தெரிந்துதான் ஆகவேண்டும். மீண்டும் கள்வர்களின் தொல்லை தொடங்கிற்று.

சமாதிப்பள்ளத்தில் புதைந்து கிடந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதில், கள்வர்களேயன்றி வேறு பலரும் ஈடுபட்டனர். பிணவடக்கத்தின் போது சடங்குகள் செய்த குருமார்களும், அப்பள்ளத்தாக்கின் காவற்பொறுப்பை ஏற்றுக் கொண்ட அதிகாரிகளுமே இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் சமாதிகளை எழுப்பிய சிற்பிகளை வர வழைத்து அவர்களுக்குக் கையூட்டு வழங்கி அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டனர். சமாதிப் பள்ளத்தாக்கைக் கொள்ளையடிக்கும் வேலை ஒரு கூட்டத்தாரின் தொழிலாகவே மாறிவிட்டது. இச்செய்தி எப்படியோ பாரோ மன்னர்களின் செவிகளுக்கு எட்டியது. இக்கொள்ளையைத் தடுக்கத் தீவிரமான நடவடிக்கைகளை மேற் கொண்டனர். பள்ளத்தாக்கில் காவலை அதிகப்படுத்தினர். கொள்ளையடிக்க முயற்சி செய்தவர்களைப் பிடித்து ஈவிரக்க மின்றிக் கொன்றனர்.

தாட்மசு என்ற பாரோ மன்னனுடைய பிணம் புதைக்கப்பட்டபோது, சமாதி எழுப்பிய சிற்பிகளைக் கொன்று விட்டனர். அவ்வாறு செய்வதன்