பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47|முருகுசுந்தரம் சில சமயங்களில் பலமான சொற்போர்க்ளும், மோதல் களும் ஏற்பட்டதுண்டு. சென்னையில் நடைபெற்ற புல்வர் கூட்டத்தில் இரண்டு குழுவும் அடிதடியில் இறங்கும் அளவுக்குப் . சினம் பொங்கப் பேசிஞர், நிகழ்ச்சி எனக்குத் தெளிவில்லை. புலவர் குழுவிலிருந்து இருதரப்புத் தீவிரவாதிகளும் வெளி யேறினர். இறுதியில் நானும் இலக்குவளுருந்தான் மிஞ்சிளுேம். புலவர் குழுவில் எதிர்ப்புணர்சியோடு இரண்டு கட்சிகள் இஆதி: அரசியல் வேறுபாடு ஒரு காரணம்; கொள்க்ை வேறுபாடு மற்ருெருகாரணம். தெ.பொ.மீ. கிரேக்க மொழியிலிருந்து தமிழ் வந்ததாகச் சொல் கிருர்; என்று பாவாணர் குற்றம் சாட்டுவார். பாவாணரின் ஆய்வுகள் தவருனவை: முறையற்றவை என்று தெ.பொ.மீ. கூறுவார். இரண்டு கட்சிக்காரர் களுக்கும் நான் மிகவும் நெருக்கம்ானவன். என்னு டைய கூட்டத்தில் தெ.பொ.மீயோ, துரை. அரங் களுசோஅல்லது அவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர் களோ தமிழை எதிர்த்துப் பேசியதில்லை. என்னைத்தவிர வேறு யானாலும் பாவேந்தர் கோபத்தைச் சமாளித் திருக்க முடியாது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பாவேந்தரின் பங்கு பாரதிதாசனின் இலக்கியப் பண்புகளை ஆய்வு செய் வதற்கு முன் பாரதியின் இலக்கியப் பண்புகளை ஆராய வேண்டும். கம்பர் காலத்திலிருந்து பாரதி காலம் வரை கவிதை ஒரு குறிப்பிட்ட மரச்சட்டத்துக்குள் சிக்கிக் கிடந்தது. கவிதையின் வெளித்தோற்றம் மட்டும் இருந்ததே தவிர, உள் உயிர் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தது. இடைக் காலத்தில் சிறந்த கவிஞர் கள் சிலர் இருந்தாலும், அவர்கள் அந்த மரச் சட்டத் துக்குள்ள்ேய்ே சுற்றிச் சுற்றி வந்தனர். பாரதி அந்தச் சட்டத்தை உடைத்து, யாப்பிலும் கருத்திலும் புதுமை செய்தார். பாரதியின் கவிதைப் பண்பை முழுக்க முழுக்கப் புதிது என்று பலர் நம்பினர். உண்மையில் அது புதிதன்று: மிகவும் தொன்மையானது.