பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற்பெருந்தமிழர் §5 ஆண்டில் பொதுமக்களின் பெருங்கிளர்ச்சிக்குப் பின் அரசாங்க உத்தியோகங்கட்கு நியமனங்கள் செய்யும் பொது அலுவல் நியமனக் குழு ஏற்பட்டது. அக் குழுவில் உத்தியோகப் பற்றற்ருரின் பிரதிநிதி யாகத் திரு. முதலியார் நியமனம் பெற்ருர். ஆம். முதல் முதலாக ஏற்பட்ட அக்குழுவில் முதல் முத லாக இடம் பெற்ற தென்னிந்தியர்-பெருந்தமி ழர்-திரு. இராமசாமி முதலியார் அவர்களே. திரு. இராமசாமி முதலியார் தேசிய உணர்ச்சி மிக்கவர்; காங்கிரஸ்மகாசபையை ஆதி நாளில் பேணி வளர்த்த பெருமக்களுள் ஒருவர். ஆனால், அந்த வரலாற்றைத் தமிழகம் இன்று அறியுமோ? திரு. இராமசாமி முதலியார் 1887ல் சென்னையிலும் பின்னர் அலகாபாதிலும்' நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுக ளி ற் கலந்துகொண்டார். சென்னை யில் கடந்த க | ங் கி ர ஸ் மகாநாட்டிற்குத் தம் பப்ளிக் சர்விஸ் கமிஷன் அலுவல்களே எல்லாம் முடித்துவிட்டு, கல்கத்தாவிலிருந்து ஒடோடியும் வந்து கலந்துகொண்டார். சென்னேக் காங்கிரஸில் ஏகாதிபத்தியம் அங்காளில் கொண்டுவந்த ஆயுதச் சட்டம் பற்றிய தம் ஆணித்தரமான கருத்துக் களேப் பறை சாற்றினர். திரு. முதலியார் அவர்கள் காங்கிரஸோடு தொடர்பு கொண்ட சில ஆண்டுகளி லேயே அவர் மேதையை அகில இந்தியத் தலை வர்களும் ஒரு மனமாக உணர்ந்தார்கள். அது கார ணமாக அகில இந்தியக் காங்கிரசின் தலைமைப் பதவியையே அவருக்களிக்க ஒரு முறை எல்லாத் தலைவர்களும் விரும்பினர்கள். ஆயினும்,பெறற்கரிய அரும்பெரும்பேற்றினேயும் தம் அடக்கம் காரண மாக ஏற்கத் தயங்கி மறுத்துவிட்டார் திரு. முதலி 5