பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|122 உடனே தாள் எடுத்தார்; எழுதினர். முதல் வரியைப் பாடிக் காட்டினர். நானும் பாடினேன். அந்த முதல் வரி என்ன? கூவாயோ கருங்குயிலே’. இந்தப் பாடல் தான் பின் னர் நாடக விழாவில் பாடப்பட்டது. பிரெஞ்சுக் காரர்கள் பாவேந்தனை மதிப்பதற்குக் காரணமாக இருந்த பாடல் இது தான். நாவ்லர்நெடுஞ் செழியன் இந்த்ப் பாடலை ஓசை நயம் குன்ருமல் எடுத்துரைக்கும் போதெல்லாம் பாரதிதாசளுரின் இளநகையோடு கூடிய முகம் தான் என் கண் முன் நிற்கும். Q துரைசாமி முதலியார் அந் நாளில் புதுவைப் பேரறிஞர். இவருக்கும் பாரதிதாசனுர்க்கும் வித்வக் காய்ச்சல். இரு வரும் சுவைமிக்க துண்டுப் பிரசுரங்களைப் பரிமாறிக் கொள்வர். துண்டுப் பிரசுரத்தோடு துரைசாமி முதலி யார் எங்கள் வீட்டுக்கு வருவார். ‘சிவகுரு! பார்த்தியா அவன் வேலையை?’ என்று என் தந்தையாரிடம் துண் டுப் பிரசுரத்தைக் காட்டுவார். என் தந்தையார் துண்டுப் பிரசுரத்தைப் படித்து விட்டுக் "கொஞ்சம் வேகம்ாத்தான் இருக்கு, போனப் போகுது. இப்படியே விட்டுடுங்க" என்று சமர்தானப் படுத்துவார். 'நீ எப்போதும் இப்படித்தான்பா' என்று சொல்லிவிட் டுப் போய் விடுவிார் துரைசாமி முதலியார். என் தந்தையார் பாவேந்தரைச் சந்தித்தால் போளுல் ே ੇ ಘೀ படுத்தாதே’ என்று ೧ಳಿ உடனே பாவேந்தர் "நீ இப்படித்தான் சிவகுரு. இவன்களை எல்லாம் உட்னுக்குடன்ே சூடு கெர்டுக் காட்டா நம்ம மேலே ஏறி உட்கார்ந்துக்குவானுங்க" என்று சொல்லுவார். துரைசாமி முதலியார் மேல் இவ்வளவு பகைமை பாராட் டிய பாவேந்தர் ஒரு நாள் எங்கள்_ இல்லத்துக்கு வந்தார். அப்போது எங்கள் வீடு வேளாளர் வீதி யில் இருந்தது. திண்ணையில் கம்பீரமாக உட்கார்ந்தார். என் தந்த்ையார் வெளி வந்ததும், சிவகுரு! நம்ம பண்டிதர் மறைஞ்சுட்டாரே. அவருக்கு ஒர் இரங்கல் கூட்டம் போட் வேண்டாமா?’ என்ருர். அப்படியே