பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்/72 பாட்டுவேண்டும் என்று பிடிவாதம் செய்தாள். பாவேந் தர் இந்தப் பெண்ணுக்குப் பாட்டு நன்ருயிருக்காது” என்ருர். "உண்மைதான்! என்ன செய்வது? இந்த டைரக்டரின் பரிவு அவளுக்கு அதிகம்; அதல்ை பிடிவாதம் செய் கிருள். நீங்கள் பாட்டை எழுதிக் கொடுத்து விடுங்கள்' என்ருர் டி.கே. சண்முகம்.

  • அப்போ, படம் கண்ருவியா இருக்கும்’ என்ருள் பாவேந்தர்.

அந்தப் பாட்டைப் பின்னுல் வெட்டி விட்டால் போகிறது. அவசியமானுல் அவள் சம்பந்தப்பட்ட காட்சி முழுவதையுமே வெட்டிவிட வேண்டியது தான்’ என்ருர் சண்முகம். - அதைக் கேட்டதும் மனத்தில் சிறிது வேதனை அடைந் தார் பாவேந்தர். பார்த்தியா சினிமா உலகம் எப்படி யிருக்கிறது? எவ்வளவு செலவழித்துப் படம் எடுக கிருன்! பின்னர் முழுவதையும் வெட்டி விடலாம் என்கிருனே! எத்தனை ஊதார்த்தனம்’’ என்று கூறி வருந்தினர். ஒரு நாள் பாரதிதாசன் அவர்களிடம் ஐம்பது ரூபாய் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதைப் பெற்றுக் கொண்டு நானும் அவரும் தனியே உல்ாவப்பேனுேம் . "பார்த்தியாப்பா! தமிழுக்கு எவ்வளவு நல்லகாலம்! ஐம்பதுருபாய் கொடுக.கருனே!’’ என்ருர். 'நன்ருய்ச் சொன்னீர்கள். அவர்கள் ரூபாய்5001= கொடுத்திருப்பார்கள். உங்கள் கைக்கு வரும்போது அது ஐம்பதாகிவிட்டது. அதற்கே நீங்கள் இவ்வளவு சந்தோஷப் படுகிறீர்கள்' என்று நான் சொன்னேன்.

  • சே!சே! அப்படியெல்லாம் இருக்காது-பாவேந்தருக் கும் படக்கம்பெனிக்கும் தொடர்பு ஏற்படுத்திய நபரின் பெயரைச் சொல்லி-அவன் அப்படியெல்லாம் செய்ய மாங்டான்' என்குள்.