பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 முருகுசுந்தரம் எதைப்பற்றி உள்ளத்தில்-எப்போது என்ன நினைக்கி ருரோ அதை அப்படியே பலர் முன்னிலையில் கொஞ்சம் கூட அஞ்சாமல், கூச்சப்படாமல் போட்டு உடைத்து விடுவார். அது அவருடைய பண்பு. பின் விளைவுகளைப் பற்றியும் கவலைப்படமாட்டார். சிதம்பரத்துக்கு அருகில் காட்டு மன்னர்குடியில் திருவாளர் சத்தியதாஸ் என்பவர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி புரிந்து வந்தார். அவருக்குத் தமிழிலும் பாவேந்தர் பாட்டிலும் அதிக ஈடுபாடு உண்டு. அவர் பாவேந்தரை அழைத்துத் தம் பள்ளி மாணவர் இலக்கிய மன்ற ஆண்டுவிழாவில் பேச வைக்க விரும்பினர். அவ்விருப் பத்தை என்னிடம் தெரிவித்தார். நான் பாவேந்தரைக் கண்டுபேசி ஒப்புதல் வாங்கிக் கொடுத்தேன். பள்ளியில் இலக்கிய மன்ற விழாவுக்கு நாள்குறிப்பிட்டு, அன்று விழாவுக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் விமரிசையாகத் தலைமையாசிரியர் செய்திருந்தார்; ஆழைப்பிதழ் அச்சிட்டு ஊர்ப்பிரமுகர்களுக்கு அனுப்பி யிருந்தார். பெருங் கவிஞர் பேச் வருகிருர் ள்ன்று ஊர் மக்கள் பள்ளிக்குத் திரளாக வந்திருந்தனர். அவ்விழா வுக்கு வந்திருந்த ஊர்ப்பிரமுகர்கள் எல்லாகும் பேராய்க் கட்சி (Congress)யைச் சார்ந்தவர்கள்; தீவிர வைண வர்கள். கவிஞர் என்றவுடன் நீளக் கோட்டும், தலையில் உருமா லும், காதில் கடுக்கனும், கைத்தடியுமாகப் பழங்கால முறைப்படி தோன்றுவார் என்று எல்லாரும் எதிர் பார்த்துக் காத்திருந்தனர். ஆனல் பாவேந்தர் நவீன உடையோடும், அச்சுறுத்தும் மீசையோடும், கையில் சிகரெட் டின் (Tin) நெருப்புப் பெட்டி சமேதராக மிடுக் கோடு பள்ளியில் நுழைந்தார். இவர் தோற்றத்தைப் பார்த்ததும் ஊர்ப்பிரமுகர்கள் முகஞ்சுளித்தனர்; அவர் கள் நெற்றியில் நிரம்பியிருந்த நாமத்தைப் பார்த்து இவர் முகஞ்சுளித்தார். கூட்டம் தொடங்கியது. பாவேந்தர் வாயிலிருந்து "சுயமரியாதைக் கருத்துக்கள் அருவியைப் போல் குதித்துப் புரண்டுவந்தன. அவர் சொற்களின் வீச்சு