பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

தன் ஆட்களில் 200 பேரை இழந்தான். திருவாங்கூராரும் ஏறத்தாழ இதே அளவு இழந்தனர். பகைவர்களுக்கு (பூலித் தேவருக்கு) இதை விடச் சேதம் அதிகம். என்றாலும், கான் சாகிபின் தாக்குதலை முறியடித்தனர். போதிய போர்த் தளவாடங்களும் இல்லாமையால், கான் சாகிபு முற்றுகையைக் கை விட்டான். 1760 ஜனவரி 28 ஆம் தேதி கான் சாகிபு தோல்வியுற்ற செய்தி சென்னைக்கு எட்டியது. திருவாங்கூரார் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்; கான் சாகிபு திருநெல்வேலிக்குத் திரும்பினான். வாசுதேவ நல்லூர்த் தோல்வி ஒன்றுதான் கான் சாகிபு கண்ட தோல்வி.

வாசுதேவ நல்லூரில் அடைந்த அவமானம் கான் சாகிபின் வாழ்வைத் திருத்தவில்லை. பழி வாங்கும் நாளை எண்ணிக் கறுவவே செய்தது. இதற்கிடையில், 1760 டிசம்பரில் மட்டும் திருச்சியில் இருந்த காப்டன் ஜோஸப் ஸ்மித்துக்குக் கும்பினிக்குக் கட்ட வேண்டிய கப்பத் தொகை ரூபாய் 2 லட்சத்தை அனுப்பினான். இதே சமயத்தில், மாபூஸ் கானும் பூலித் தேவர் பிடியினின்றும் நழுவி ஓடிப் புதுக் கோட்டைத் தொண்டைமான் நிழலில் இளைப்பாறி, நவாபிடம் மன்னிப்புப் பெற்று உயிர் பிழைத்தான். கான் சாகிபு 1761-ஆம் ஆண்டு வரை போராடிப் போராடிப் பூலித் தேவரின் கோட்டைகளைப் பிடித்தான் என்று சில குறிப்புக்கள் கூறுகின்றன. இவ்வாறு இராணுவ வாழ்வு தொடங்கிய நாள் தொட்டு விடுதலை வீரர்களைத் தாக்கியும், அழித்தும், கோழைகளை வளர்த்தும், வாழ்வித்தும் நாச வேலைகளை நடத்தி