பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162சீவக சிந்தாமணி



இப்படிச் செய்திகள் அடுத்த நாளில் எங்கும் பரவின.

அவ்வளவுதான்; ஆத்திகர்கள் எல்லாம் கூடிக் கண்டனக் கூட்டம் நடத்தினர்.

“தெய்வம் பேசாது; இது ஏதோ மோசடி” என்று கண்டனக்குரல் எழுப்பினார்கள்.

இதற்கே இப்படி என்றால் கடவுளைக் கண்டேன் என்றால் யார் இந்த உலகத்தில் நம்பப் போகிறார்கள். அதனால்தான் கண்டவர்கள் இதுவரை வெளியில் சொன்னதில்லை என்று தெரிகிறது.

சுரமஞ்சரிக்கும் சீவகனுக்கும் திருமணம் நடந்தது; அவன்தான் சீவகன் என்ற செய்தி மறைக்கப்பட்டது. பெற்றோர்கள் நிச்சயித்த மணமகன் ஒருவனை அவள் விரும்பி மணம் செய்து கொண்டாள் என்று பேசும்படி வதந்தி பரப்பி விட்டார்கள்.

நண்பர்கள் அவனுக்குக் காமதிலகன் என்று பட்டம் சூட்டிப் பாராட்டினார்கள்.

“கோட்டைக்குள் எப்படி உள்ளே புகமுடிந்தது?” என்று அவனை ஒரு வினா கேட்டான் அறிவழகன்.

“கிழவனாகப் போய் உருமாறினேன்” என்றான்.

“அது எப்படி முடிந்தது?” என்று வியந்தனர்.

சுதஞ்சணன் கற்றுக் கொடுத்த மந்திரசக்தி இது; எனக்குக் கற்றுக் கொடுத்த இரண்டாவது மந்திரம்; தேவைப்படும் போது உருக்கரந்து மாறலாம்; எல்லாம் மந்திரம் தான்.

அந்தக் காலத்தில் ஒப்பனை செய்து கொள்ளத் தாடி இருந்தாலும் இவன் அதனை நாடவில்லை.

“மற்றொரு மந்திரம் என்ன?” என்று கேட்டனர்.