பக்கம்:ஊரார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ጃ ஆப்பக்கார அம்மாளிடம் போய்ச் சொன்னன். டெய்லர் கேசவனிடம் சொன்னன். நாட்டாண்மைக்கார ரிடம் சொன்னன். ட்ராமாக்காரி ரத்ன பாயிடம் சொன் ஞன். யாருமே கவலைப்படவில்லை. - ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டார்கள். ரத்ளுபாய் மட்டும் அலட்சியமாக அவர் கிட்டதான் சூர்ணம் இருக்குமே சாப்பிடச் சொல்லு, சரியாயிடும்' என்ருள். அடுத்த ஊரிலிருந்து தினமும் ஒரு டாக்டர் வருவது வழக்கம். தெருக்கோடியில் உள்ள அ வ் ரு டை ய' டிஸ்பென்ஸ்ரிக்கு ஓடினன் குமாரு. - 'சாமியாருக்குக் காய்ச்சல் வந்து பாக்கறிங்களா?” "பணம் வச்சிருக்கயா?" டாக்டர் சிரித்தார். 'இல்லே..." ::இது தர்ம ஆஸ்பத்திரி இல்லே. போய்ப் பணம் கொண்டு வா. வந்து பாக்கறேன்.' - "எத்தினி ரூவா?” 'முதல்லே பத்து ருவா கொண்டா: அப்புறம் மருந்துக் குத் தனி..." குமாரு ஒடிஞன். கமலாவைத் தேடிப் போய்ப் பணம் க்ேட்டான். "டாக்டருக்குப் பத்து ரூவா வேணுமாம். பணம் இல்லாமே வரமாட்டாராம்..." 'இந்தாடா, என்கிட்டே இருக்குது பத்து ரூவா. இதைக் கொண்டு போய்க் கொடு. வருவாரு." கமலாவிடமிருந்து பத்து ரூபாயை வாங்கிக் கொண்டு குமாரு திரும்பி டாக்டரிடம் ஒடினன். பணத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/52&oldid=758737" இலிருந்து மீள்விக்கப்பட்டது