பக்கம்:தாய்லாந்து.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



‘என்ன ரெடியா?’ என்று கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்தார் நண்பர் சரவணன். சுறுசுறுப்பான இளைஞர். காரைக்குடியைச் சேர்ந்தவர். கையில் டெலிபோனுடனேயே சுற்றுகிறார். ஜெம் பிஸினஸ் செய்கிறாராம். பெல்ஜியத்தில் சில மாதங்கள் இருந்து. பின்னர் இங்கே கடந்த பன்னிரண்டு வருடங்களாக ‘பிஸினெஸ்’ செய்து வருகிறாராம்.

மாரியம்மன் கோயிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் சரவணன் தெரிந்து வைத்திருக்கிறார். அதன் திருப்பணியில் மிகுந்த அக்கறையுடன் பாடுபட்டு வருகிறார்.

“பாங்காங்கில் உருவான முதல் இந்துக் கோவில் இதுதான். தமிழர்களால் கட்டப்பட்ட ஆலயம்.

இந்தக் கோவில் இப்போது புதுப் பொலிவு பெற்று வருகிறது. ஆலயத்திருப்பணிகள் நடந்து முடிவடையும் தறுவாயில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது. அந்தச்சமயம் நீங்கள் இங்கே வரவேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

நவராத்திரி விழாவின் கடைசி நாளன்று இதோ இந்த சிலோம் ரோடு முழுவதுமே மூடப்பட்டு விடும். அன்று அம்மன் ஊர்வலம் நடைபெறும். அதற்காக இந்த ரோடில் போக்குவரத்து முழுமையாக இராது. தாய்லாந்து மக்களின் சொந்தத் திருவிழாக்களில் கூட இப்படி ரோடை அடைப்பதில்லை. இது நம் நாட்டுக்கு அவர்கள் காட்டும் மரியாதை. நம் தெய்வத்தின் மீது அவர்கள் வைத்துள்ள பக்திக்கும் நம்பிக்கைக்கும் அடையாளம். அது மட்டுமல்ல; தாய்லாந்து மன்னரும், அரசாங்கமும் இந்தியருக்குக் காட்டும் ஆதரவையும் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

“தாய் நாட்டில் பொங்கல் கொண்டாட முடியாது போனாலும், தாய்லாந்தில் அதுவும் நம் தமிழ்க் கோவிலில், பொங்கல் திருநாளன்று இருக்க முடிந்ததைப் பெருமையாகவும் பெரும் பேறாகவும் கருதுகிறேன்’ என்றேன் நான்.

“சாப்பிடக் கொஞ்சம் பொங்கல் கிடைத்தால், இன்னும் சந்தோஷமாக இருக்கும்!” என்றார் ஸ்ரீவே.

“கொஞ்சம் என்ன? நிறையவே கிடைக்கும்!” என்று சொல்லி எங்களைப் பிராகார வெளிக்கு அழைத்துப்போய்

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/83&oldid=1075273" இலிருந்து மீள்விக்கப்பட்டது