பக்கம்:ஊரார்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ஏதாவது தொழிற்சாலை தொடங்கி நடத்தணும். அதேைல ஒரு நூறு பேருக்கு பிளேப்பு நடக்கணும்...... செய்வியா?” "துப்பாக்கித்தொழிற்சாலை ஆரம்பிக்கட்டுமா?" "நீ துப்பாக்கியிலேயே இரு. அதெல்லாம் அரசாங்கத் திலே செய்வாங்க. நீ துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி: ицу.“ "அது என்ன துப்பாக்கி!” அது துப்பாக்கி இல்லேடா திருக்குறள். மளை மாதிரி நாலு பேருக்கு உதவியாயிரு” என்ருர். மழை வரும் போல இருக்குதே எங்க வீட்டுத் திண்ணையிலே வந்து படுக்கறிங்களா?" - - "வேளும்; நான் பிள்ளையார் கோயில் ஆண்டி எனக்கு இந்த எடமே போதும்." - "ஆண்டின்ன? உங்களுக்கு யாருமே இல்லையா?. ... " 'திண்டிவனத்திலே தங்கச்சி இருக்கா. சம்சாரம் கோயமுத்தூர் மில்லிலே வேலை செய்யுது. ஒரே ஒரு மகன் தான். அவன் ஆட்டோ ரிக்ஷா ஒட்ருன். படிப்பு ஏறல்லே..." "நீங்க ஏன் இங்கே வந்துட்டீங்க. "நான் சாமியாராயிட்டேன். பந்தம் பாசம் எல்லாத் தையும் விட்டுட்டேன். ஆனல் அதுதான் என்ன விட மாட்டேங்குது. அந்தப் பாசம் உன் ப்ேரிலே திரும்பிட்டுது. இந்தப்பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டணும்...உன்னைப் படிக்க வச்சுப் பெரிய மனுசனுக்கணும்... இதாண்டா என் லச்சியம்.” - - ஜூர வேகத்தில் சாமியார் படபடவென்று பேசிஞர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊரார்.pdf/50&oldid=758735" இலிருந்து மீள்விக்கப்பட்டது