பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. с வில்லியம் ஹார்வி பல விஞ்ஞானிகள் கண்ட உண்மைகளையும், சொன்ன விளக்கங்களேயும், எழுதிவைத்த நூல்களையும் சிலர் ஒப்புக் கொள்ளாமலே இருக்கிருர்கள். சிலர் நம்பவே மறுக்கிறர்கள்; சிலர் ஐயப்படுகிறர்கள். எஞ்சிய சிலர்தான் ஒப்புக்கொள் கிருர்கள். விஞ்ஞானிகள் கண்டவற்றை அவர்கள் வாழ்நாளி லேயே கைகழுவுவதைக் காண்பதில் அல, சில விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புக்களே மக்கள் எவ்வாறு வரவேற் கிருர்கள், பயன்படுத்துகிறர்கள், அதனுல் அந்த நாட்டு ஆட்சிக்கோ மக்களுக்கோ என்ன பயன் கிடைக்கிறது என்பவற்றைக் கண்டபிறகே கண் மூடுகிறர்கள். சிலர் ஏதோ நம்முடைய கடமையைச் செய்தோம், இக்கால மக்களுக்கோ, பிற்கால மக்களுக்கோ பயன் தரட்டும் என்ற நம்பிக்கையில் இருக்கிறர்கள். பொய், கற்பனை என்று மக்களால் ஒதுக்கப் பட்ட உண்மைகள், அவை மனித சமூகத்தின் வாழ்வில் ஒன்றிப் போகின்றபோது, ஆகா, இவ்வளவு நாள் இதன் சிறப்பை அறியாமல் போனேமே என்று வெட்கப்படு கின்றவர்களும் இருக்கிறர்கள். கல்லோடு கல் தேய்த்து ஒளியை உண்டாக்கிய காலம் முதல், எங்கோ ஒரு மூலையில் நின்றுகொண்டு, பித்தானை அழுத்தியவுடனே ஒரே