இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என் பெயர் ரோஜா
என்னை ரோஜா என்பார்கள்
இதழை விரும்பித் தின்பார்கள்!
குங்குமம் போலவே சிவந்திருப்பேன்!
கூடவே சந்தனம் கலந்திருப்பேன்!
அம்புலி போலவே சிரித்திருப்பேன்
அழகாய் சிரித்தே தேன்கொடுப்பேன்!
மடியில் குழந்தை சிரிப்பதுபோல்
மக்களைச் சிரித்தே மயக்கிடுவேன்!
மூடியில் அமர்ந்தே சிவந்திடுவேன்!
மின்னும் அழகில் கலந்திருப்பேன்!
என்னைக் கண்டே வண்டுகளும் இசையைக்கூடவே கொண்டுவரும்!பொன்போல் என்னைப் போற்றிடுவார்
புகழாய் தலையில் ஏற்றிடுவார்!
24